யாவர்க்குக் கொடுப்பை? போரை விரும்பிய செல்வ! நீஅவர்க்குத் தோற்பின் நின்னையிகழும் பகைவர்உவப்பப் பழியை உலகத்தே நிறுத்துவை; ஆதலான், ஒழிவதாகநின்னுடைய மறன்; கடிதின் விரைந்தெழுந்திருப்பாயாக;நின்னுடைய உள்ளம் வாழ்வதாக; அஞ்சினோர்க்குஅரணாகும் நினதடிநிழல் மயங்காமற் செய்தல்வேண்டும்,நல்வினையை; விண்ணோரது பெறுதற்கரிய உலகத்தின்கண்அமைந்தவர் விரைந்த விருப்பத்தோடு விருந்தாக ஏற்றுக்கொள்ள-எ - று. மற்று : அசை. தில் :விழைவின்கண் வந்தது. வானோருலகென்றது,ஒட்டன்றி ஒருபெயராய் நின்றது. வேந்தே!நின்மறனொழிக; ஆன்றவர் விருந்தெதிர்கொளற்குநன்று செய்தல்வேண்டும்; ஆதலால், அதற்கு விரைந்தெழுவாயாக; நின்னுள்ளம்வாழ்வதாகவெனக் கூட்டி வினைமுடிவு செய்க. செல்வமும்பழியும் சினைவினைப்பாற்பட்டு முதல்வினைகொண்டன. எஞ்சுதல் -இவர்க்குப்பின்னும் நிற்றல். தாணிழல்மயங்காதென்பதற்கு நினக்கு ஒருதீங்கும் வாராமலென்றதாகக்கொள்க. இனி ‘அதனா லன்ன தாதலுமறிவோய்’ என்றதற்கு உயர்ந்தோருலகம் எய்துவதுகாரணத்தால் அத்தாயம் அவர்க்கு அப்படியேயுரித்து;அன்னதாதல் நீயறிவையென முற்றாகவும், அழிந்தோர்க்குஏமமாகும் நின் தாணிழலென முற்றாக்கி மயங்காதுதெளிந்துநின்று நன்றுசெய்தல் வேண்டுமெனவும் உரைப்பாரும்உளர். ‘மாவெங் காட்சியொடுமாறெதிர்ந் தெழுந்தவர்’ என்று பாடம் ஓதுவாரும்உளர். (கு - ரை.) 1. ‘‘மண்டமரட்ட களிறன்னான்” (கலித். 61) 3. புறநா. 18 : 11 - 12, 19 : 11, 201 : 17, 363 : 1. 9-10. புறநா. 27 : 7 - 9, குறிப்புரை. 10-11. புறநா. 75 : 1 - 2. 15-8. புறநா. 45 : 5-6.22-4. புறநா. 62 : 18 - 9. (213) 214 | செய்குவங் கொல்லோ நல்வினை யெனவே ஐய மறாஅர் கசடீண்டு காட்சி நீங்கா நெஞ்சத்துத் துணிவில் லோரே யானை வேட்டுவன் யானையும் பெறுமே | | 5 | குறும்பூழ் வேட்டுவன் வறுங்கையும் வருமே அதனால், உயர்ந்த வேட்டத் துயர்ந்திசி னோர்க்குச் செய்வினை மருங்கி னெய்த லுண்டெனிற் றொய்யா வுலகத்துநுகர்ச்சியுங் கூடும் |
|