பக்கம் எண் :

383

தொய்யா வுலகத்துநுகர்ச்சி யில்லெனின்
10மாறிப்பிறப்பி னின்மையுங் கூடும்
மாறிப் பிறவா ராயினுமிமயத்துக்
கோடுயர்ந் தன்ன தம்மிசை நட்டுத்
தீதில்யாக்கையொடு மாய்தறவத் தலையே.

(பி - ம்.) 2 ‘மாறாஅர்’ 6 ‘துயந்திசினோரே’, ‘துயர்ந்திசினோரே 10 ‘பிறப்பின்வன்மையுங்”

திணை - பொதுவியல்; துறை -பொருண்மொழிக்காஞ்சி.

அவன்1வடக்கிருந்தான் சொற்றது

(இ - ள்.) அறவினையைச்செய்வேமோஅல்லேமோவென்று கருதி ஐயப்பாடு நீங்கார் அழுக்குச்செறிந்தகாட்சிநீங்காத உள்ளத்தினையுடைய தெளிவில்லாதோர்;யானைவேட்டைக்குப்போவோன் யானையையும் எளிதாகப்பெறுவன்; குறும்பூழ் வேட்டைக்குப் போவோன் அது பெறாதுவறிய கையினனாயும் வருவன்; அதனால் உயர்ந்த விருப்பத்தையுடையஉயர்ந்தோர்க்குத் தாம் செய்யப்பட்ட நல்வினைக்கூற்றிலே அதனைஅனுபவித்தலுண்டாமாயின் அவர்க்கு இருவினையும் செய்யப்படாதஉம்பருலகத்தின்கண் இன்பம் அனுபவித்தலுங் கூடும் (பி-ம்.கூட்டும்) ; அவ்வுலகத்தின்கண் நுகர்ச்சியில்லையாயின், மாறிப்பிறத்தலிலேகூடும் பிறப்பின்கண் இன்மை எய்தவுங்கூடும்;மாறிப்பிறவாரென்று சொல்லுவாருள ராயின்இமயமலையின் சிகரம் ஓங்கினாற்போன்ற தமது 2 புகழைநிலைபெறுத்தி வசையில்லாத உடம்பொடு கூடிநின்றுஇறத்தல் மிகத் தலையாயது; அதனால் எவ்வாற்றானும்நல்வினைசெய்தல் அழகிது-எ - று.

உயர்ந்திசினோர்க்கென்னும் நான்காவதன்றியும் உயர்ந்திசினோர் செய்வினைமருங்கின் எய்தலுண்டெனின், இவர்க்கு நுகர்ச்சிங்கூடுமென்று உரைப்பினும் அமையும்.

‘பிறவாராயினும்’ என்னும் உம்மை அசைநிலை; உம்மையின்றி ஓதுவாரும் உளர்.

‘காட்சியொடு நீங்கா நெஞ்சத்து’ என்பதூஉம் பாடம்.

(கு - ரை.) 4-5. குறும்பூழ் - ஒருவகைப்பறவை.‘‘பொருமால் கரிவேட்டும் பூழ்வேட்டும் போனார், உரியார் பெறுவ ரொழிந்தார் பெறாரே” (தத்துவ. கலிமடல்.)

7-8. புறநா. 174 : 19 - 20, குறிப்புரை.

6-9. புறநா. 38 : 12 - 6.

(214)


1. புறநா, 65 : 9 - 11, குறிப்புரை,

2 ‘‘வசையிலா வண்பயன் குன்று மிசையிலா, யாக்கை பொறுத்த நிலம்” (குறள்.239)