பக்கம் எண் :

409

இப்படி வேறுபட்ட தன்மையை யுடையையாதலின்,நினக்கு யான் பொருந்தினேனல்லாமையான் ; இங்ஙனம்பொருந்திற்றிலே னாயினும் இப்பிறப்பின் கண் நீயும்யானுங்கூடி இன்புற்றிருந்தவாறு போலக் காட்டி மறுபிறப்பினும்இடைவிடாத காட்சியினையுடைய நின்னோடு கூடிவாழ்தலைஉயர்ந்த விதி கூட்டுவதாக...எ - று.

உலந்த யாண்டு’ என்று பாடமாயின், கழிந்த யாண்டென்க.

மற்று: அசைநிலை.

(கு - ரை.) 1.‘’முழவன பலவின் றீங்கனி” (சீவக. 825)

2. ‘’அரிப்பறை வினைஞ ரல்குமிசைக் கூட்டும்” (ஐங்குறு. 81)

(236)

237

நீடுவாழ் கென்றியா னெடுங்கடை குறுகிப்
பாடி நின்ற பசிநாட் கண்ணே
கோடைக் காலத்துக் கொழுநிழ லாகிப்
பொய்த்த லறியா வுரவோன் செவிமுதல்
5வித்திய பனுவல் விளைந்தன்று நன்றென
நச்சி யிருந்த நசைபழு தாக
அட்ட குழிசி யழற்பயந் தாஅங்
களியர் தாமே யார்க வென்னா
அறனில் கூற்றந் திறனின்று துணிய
10ஊழி னுருப்ப வெருக்கிய மகளிர்
வாழைப் பூவின் வளைமுறி சிதற
முதுவா யொக்கற் பரிசில ரிரங்கக்
கள்ளி போகிய களரியம் பறந்தலை
வெள்வேல் விடலை சென்றுமாய்ந் தனனே
15ஆங்கது நோயின் றாக வோங்குவரைப்
புலிபார்த் தொற்றிய களிற்றிரை பிழைப்பின்
எலிபார்த் தொற்றா தாகு மலிதிரைக்
கடன்மண்டு புனலி னிழுமெனச் சென்று
நனியுடைப் பரிசிற் றருகம்
20எழுமதி நெஞ்சே துணிபுமுந் துறுத்தே.

திணையும் துறையும் அவை.

வெளிமானுழைச் சென்றார்க்கு அவன் துஞ்ச இளவெளிமான் சிறிது கொடுப்பக் கொள்ளாது பெருஞ்சித்திரனார் பாடியது,

(இ - ள்.) நெடுங்காலம் வாழ்வாயாகவென்று யான் நெடிய வாயிலை அணுகிப் பாடிநின்ற பசியையுடைய காலத்தின்கண்ணே,கோடையான் வெம்மையுற்றபொழுதின்கண் அடைந்தார்க்குக்கொழுவிய நிழலையொத்து யார்கண்ணும் பொய்கூறுதல்அறியாத