| 5 | காடுமுன் னினனேகட்கா முறுநன் தொடிகழி மகளிரிற் றொல்கவின் வாடிப் பாடுநர்கடும்பும் பையென் றனவே தோடுகொண் முரசுங்கிழிந்தன கண்ணே ஆளில், வரைபோல் யானையுமருப்பிழந் தனவே | | 10 | வெந்திறற்கூற்றம் பெரும்பே துறுப்ப எந்தை யாகுல வதற்படலறியேன் அந்தோ வளியேன் வந்தனென் மன்ற என்னாகுவர்கொலெற் றுன்னி யோரே மாரி யிரவின்மரங்கவிழ் பொழுதின் | | 15 | ஆரஞ ருற்றநெஞ்சமொ டொராங்குக் கண்ணி லூமன் கடற்பட் டாங்கு வரையளந்தறியாத் திரையரு நீத்தத் தவல மறுசுழி மறுகலிற் றவலேநன்றுமற் றகுதியு மதுவே. |
(பி - ம்.) 11 'யாகுதலதற்பட' திணையும் துறையும் அவை. வெளிமான்துஞ்சியபின் அவர் பாடியது. (இ - ள்.) பிணமிட்டுப்புதைக்கப்பட்ட கவிக்கப்பட்ட செய்ய தாழியினது குவிந்தபுறத்தேயிருந்த செவி சிவந்த கழுகின்சேவலும் பொகுவலென்னும்புள்ளும் அஞ்சாவாய் வாய்வலிய காக்கையும் கோட்டானும் கூடிப் பேயினத்துடனே தாம் விரும்பியவழியேஇயங்கும் சுடு காட்டைத் தலைப்பட்டான், வீரபானத்தைக்காமுறுவான்; அவனுடைய வளைகழிக்கப்பட்ட உரிமை மகளிரைப்போலப் பழையஅழகு தொலைந்து பாடுவாரது சுற்றமும் ஒளிமழுங்கின; தொகுதிகொண்டமுரசங்களும் கண்கிழிந்தன; பாகர்முதலாயின ஆளில்லாதமலைபோன்ற யானைகளும் மருப்பிழந்து விட்டன; இவ்வாறுவெவ்விய திறலையுடைய கூற்றம் பெரிய இறந்துபாட்டைஎய்துவிப்ப என் இறைவன்........அவ்விறந்து பாட்டிலே படுதலைஅறியேனாய் ஐயோ! அளித்தலையுடையேன் வந்தேன்;நிச்சயமாக என்ன துயரமுறுவர்கொல்லோ என்னையடைந்தசுற்றத்தார்? மழையையுடைய இரவின்கண் மரக்கலம்கவிழ்ந்தகாலத்துப் பொறுத்தற்கரிய துன்பமுற்றநெஞ்சுடனே ஒருபெற்றிப்படக் கண்ணில்லாத ஊமன்கடலின்கண் அழுந்தினாற்போல எல்லையளந்தறியப்படாததிரையரிதாகிய வெள்ளத்தின்கண் துன்பமாகியமறுசுழியின்கட் பட்டுச் சுழலுமதனின் இறந்துபடுதலேநன்று; நமக்குத் தக்க செய்கையும் அதுவே-எ - று. யான் அதுசெய்யப்பெற்றிலேனென்னும் நினைவிற்று.
|