காண்ட லோடுமத்தொலி கேளாதோனாயினான்; அவனுக்கு அவைதாம்மிகப்பல வாயினும் என்னாம் எனக்கூட்டுக. கேளாதோற்கென உருபுவிரித்துஉரைப்பினும் அமையும். (கு - ரை.) மு. வெட்சித்திணைத்துறைகளுள்,‘நோயின் றுய்த்தல்’ என்பதற்கு மேற்கோள்; தொல்.புறத்திணை. சூ. 3, இளம். 13. உறை - துளி. (257) 258 | முட்காற் காரை முதுபழ னேய்ப்பத் தெறிப்ப விளைந்த தீங்கந் தாரம் நிறுத்த வாயந் தலைச்சென் றுண்டு பச்சூன் றின்று பைந்நிணம் பெருத்த | | 5 | எச்சி லீர்ங்கை விற்புறந் திமிரிப் புலம்புக் கனனே புல்லணற் காளை ஒருமுறை யுண்ணா வளவைப் பெருநிரை ஊர்ப்புற நிறையத் தருகுவன் யார்க்கும் தொடுத லோம்புமதி முதுகட் சாடி | | 10 | ஆதரக் கழுமிய துகளன் காய்தலு முண்டக் கள்வெய் யோனே. |
(பி - ம்.) 1 ‘முதுகனியேய்ப்பத்’2 ‘தீங்கட்டாரம்’ 4 ‘பைச்சூன்’ 7 ‘வளவைபெருநிரை’10 ‘ஆத்தர’ திணையும் துறையும் அவை. .......................உலோச்சனார் பாடியது. உண்டாட்டாவது:- ‘’தொட்டிமிழுங் கழன்மறவர் மட்டுண்டு மகிழ்தூங்கின்று” (பு. வெ. 15) (இ - ள்.) முட்டாளையுடைய காரையினதுமுதிர்ந்த பழத்தையொப்ப முற்ற விளைந்த இனிய கந்தாரமென்னும்பெயரையுடைய மதுவையுடைய வேற்றுப்புலத்துத் தான்கொண்டுவந்துநிறுத்தின நிரையைக் கள்விலைக்கு நேராகக் கொடுத்துஉண்டு செவ்வித்தசையைத் தின்று செவ்விநிணமிக்கஎச்சிலாகிய ஈரமுடைய கையை வில்லினது புறத்தேதிமிர்ந்து வேற்று நாட்டின்கட் புக்கானே, புல்லியதாடியையுடைய காளை; இவ்விருந்த மறவர் ஒருகால் உண்பதன்முன்னேபெரிய ஆனிரையை இவ்வூர்ப்புறமெல்லாம் நிற்பக்கொடுதருகுவன்; யாவர்க்கும் வாராது அதற்பொருட்டுத்தொடுதலைப் பாதுகாத்துவைப்பாயாக, முதிர்ந்தமதுவையுடைய சாடியை; ஆவைக் கொண்டுவரக் கலந்ததூளியையுடையனாய் அம்மதுவை விரும்புவோன்விடாய்த்தலும் உண்டாம்-எ - று.
|