தலைச்சென்றென்பது, தலைச்செலவெனத்திரிக்கப்பட்டது. இதற்குக் கள்விலையாட்டியிடத்தேசெல்லவென்றுமாம். ‘தீங்கட்டாரம்’ என்றோதிக் கள்ளாகிய இனியபண்டமெனினும் அமையும். ‘காய்தலுமுண்டு’ என்பதற்குக்கள்வெய்யோனாகலின், நின்னை வெகுளவுங்கூடுமென்பாரும்உளர். இவன் நிரைகொள்ளச் செல்கின்றமைகண்டார் கள்விலையாட்டிக்குக் கூறியது. (கு - ரை.) 3. புறநா. 177: 14. 6. ஏழாம்வேற்றுமை வினையோடுமுடியும்வழித் திரிந்ததற்கும் (தொல். தொகை.சூ. 15, இளம். ந.) , வேற்றுமைக்கண் மகரவொற்றுப்பகரம்வந்துழிக் கெடாது நின்றதற்கும் (தொல்.புள்ளிமயங்கு. சூ. 17, இளம். ந; இ. வி. சூ. 129,உரை) மேற்கோள். 10. "கழுமிய துன்பமொடு கண்ணீருகுத்து” (மணி. 13: 18) மு. ‘முட்காற் காரை......வெய்யோனே:இது வெட்சித்திணை பெயர் கொள்ளாது வந்தது’ (தொல்.அகத்திணை. சூ. 54, ந.) (258) 259 | ஏறுடைப் பெருநிரை பெயர்தரப் பெயரா திலைபுதை பெருங்காட்டுத் தலைகரந் திருந்த வல்வின் மறவ ரொடுக்கங் காணாய் செல்லல் செல்லல் சிறக்கநின் னுள்ளம் | | 5 | முருகுமெய்ப் பட்ட புலைத்தி போலத் தாவுபு தெறிக்கு மான்மேற் புடையிலங் கொள்வாட் புனைகழ லோயே. |
திணை - கரந்தை; துறை - செருமலைதல்: பிள்ளைப்பெயர்ச்சியுமாம். ................கோடைபாடிய பெரும்பூதனார் பாடியது. செருமலைதலாவது:- ‘’வெட்சி யாரைக் கண்ணுற்று வளைஇ உட்குவரத் தாக்கி யுளர்செருப் புரிந்தன்று” (பு. வெ. 25) (இ - ள்.) தாம் கொள்ளப்பட்ட ஏற்றையுடைய பெரிய ஆனிரை முன்னே போக மீட்கவருவாரைக் குறித்து அந்நிரையோடு தாம் போகாது தழையால் மூடிய பெரிய காட்டின்கண் தலைகரந்திருந்த வலிய வில்லையுடைய மறவரது ஒடுங்கிய நிலையைக் கருதாய்; போகாதொழி, போகாதொழி, நினது மேற்கோள் சிறப்பதாக, தெய்வம்
|