மெய்யின்கண் ஏறிய புலைமகளையொப்பத் தாவித் துள்ளும் ஆனிரைமேல்; மருங்கிலே விளங்காநின்ற ஒள்ளிய வாளினையும் வீரக்கழலினையுமுடையோய்!-எ - று. புனைகழலோய்! காணாய்; ஆன்மேற் செல்லல், செல்லல்; நின் உள்ளம் சிறப்பதாகவெனக் கூட்டுக. செல்லலென்றது அவரைக் கண்டு பொருது கொன்றன்றிச் செல்ல லென்பதாம். (கு - ரை.) மு. வெட்சித்திணைத்துறைகளுள், ‘ஆபெயர்த்துத் தருதல்’ என்பதற்கு மேற்கோள்; தொல்.புறத்திணை. சூ. 5, இளம்; ந. (259) 260 | வளரத் தொடினும் வௌவுபு திரிந்து விளரி யுறுதருந் தீந்தொடை நினையாத் தளரு நெஞ்சந் தலைஇ மனையோள் உளருங் கூந்த னோக்கிக் களர | | 5 | கள்ளி நீழற் கடவுள் வாழ்த்திப் பசிபடு மருங்குலை கசிபுகை தொழாஅக் காணலென் கொல்லென வினவினை வரூஉம் பாண கேண்மதி யாணரது நிலையே புரவத்தொடுத் துண்குவை யாயினு மிரவெழுந் | | 10 | தெவ்வங் கொள்குவை யாயினு மிரண்டும் கையுள போலுங் கடிதண் மையவே முன்னூர்ப் பூசலிற் றோன்றித் தன்னூர் நெடுநிரை தழீஇய மீளி யாளர் விடுகணை நீத்தந் துடிபுணை யாக | | 15 | வென்றி தந்து கொன்றுகோள் விடுத்து வையகம் புலம்ப வளைஇய பாம்பின் வையெயிற் றுய்ந்த மதியின் மறவர் கையகத் துய்ந்த கன்றுடைப் பல்லான் நிரையொடு வந்த வுரைய னாகி | | 20 | உரிகளை யரவ மானத் தானே அரிதுசெல் லுலகிற் சென்றன னுடம்பே கானச் சிற்றியாற் றருங்கரைக் காலுற்றுக் கம்பமொடு துளங்கிய விலக்கம் போல அம்பொடு துளங்கி யாண்டொழிந் தன்றே | | 25 | உயரிசை வெறுப்பத் தோன்றியபெயரே மடஞ்சான் மஞ்ஞை யணிமயிர் சூட்டி |
|