பக்கம் எண் :

591

முன்னாணண்பகற் சுரனுழந்து வருந்திக்
கதிர்நனி செ....................................மாலைத்
தன்கடைத் தோன்றியென்னுற விசைத்தலிற்
25றீங்குரல்......................................கி னரிக்குரற் றடாரியோ
டாங்குநின்ற வெற்கண்டு
சிறிதுநில்லான் பெரிதுங்கூறான்
அருங்கலம் வரவே யருளினன் வேண்டி
.....................யென வுரைத்தன்றி நல்கித் தன்மனைப்
30பொன்போன் மடந்தையைக் காட்டி யிவனை
என்போற் போற்றென் றோனே யதற்கண்
டவன்மறவ லேனே பிறருள்ள லேனே
அகன்ஞாலம் பெரிதுவெம்பினும்
மிகவானு ளெரிதோன்றினும்
35குளமீனொடுந் தாட்புகையினும்
பெருஞ்செய் நெல்லின் கொக்குகிர் நிமிரல்
பசுங்கட் கருனைச் சூட்டொடு மாந்தி
விளைவொன்றோ வெள்ளங் கொள்கென
உள்ளது மில்லது மறியா
40தாங்கமைந் தன்றால் வாழ்கவன் றாளே.

(பி - ம்.) 3 'காழைச்சூட்டொடு நெடுவானைபல்லுவியற்' 5 'புகவருத்திப்' 11 'கூப்பெயர்க்குந்து' 13 'மென்சாயலாற்' 15 'புள்ளுரீஇயுந்து' 20 இருங்கோவெணமான்', 'னருஙகடலபபிடவூர்' 22 'ணன்பகற்' 24 'நன்கடை' 28 'அயருஙகலம்' 34 'ளெரிததொனகரினுங்' 35 'காட்புரையினும்' 36 'பெருமபெய்' 37 'கருணைச் சூளைசசூடகமாடுமாந்தி'

திணையும் துறையும் அவை.

சோழநாட்டுப் பிடவூர்கிழார்மகன் பெருஞ்சாத்தனை மதுரைநக்கீரர்.

(கு - ரை.) 1. மென்புலம் - மருதநிலம்.

2. வன்புலம் - முல்லைநிலம். விட்டு - மேய்தற்குவிட்டு.

3. குழைச்சூடு - குழைதலையுடைய சூட்டிறைச்சி.

4. உவியல் - அவியல்; "சாந்த விறகி னுவித்த புன்கம்" (புறநா.168 : 11)

5. புகவு - உணவு ; "வானிணப் புகவிற் கானவர்" (அகநா. 132 : 5) : இச்சொல் புகாவெனவும் வழங்கும்; "அகனாட்டண்ணல்