பக்கம் எண் :

590

7. "ஒருகண் மாக்கிணை யொற்றுபு" (புறநா. 392 : 5)

8. பாடு - ஒலி. தந்தை - பாட்டுடைத் தலைவன் தந்தை.

9. வஞ்சி - பகைமேற் செல்லுதலை.

11 - 2. "இருங்கடறு வளைஇய குன்றத் தன்னதோர், பெருங்களிறு நல்கி யோனே யன்னதோர், தேற்றா வீகையு முளதுகொல்" (புறநா. 140 : 7-9)

13. பெயர்த்தனெனாக - பெயர்க்க.

15. அதற்கொண்டு - அதனால்.

16. "இரும்பே ரொக்கல் பெரும்புலம் பகற்ற" (புறநா. 390 : 20) மு. புறநா. 140.

இப்பாட்டினைப் பொருநராற்றுப்படைக்கு மேற்கோளாகக் காட்டினர் ; தொல். புறத்திணை. சூ. 30, இளம்.; சூ 36, ந.
இப்பாட்டு, புகழாப்புகழ்ச்சியென்னும் அணியின்பாற்படும்.

(394)

395

மென்புலத்து வயலுழவர்
வன்புலத்துப் பகடுவிட்டுக்
குறுமுயலின் குழைச்சூட்டொடு
நெடுவாளைப் பல்லுவியற்
5பழஞ்சோற்றுப் புகவருந்திப்
புதற்றளவின் பூச்சூடி
............................................................
...................................அரியலாருந்து
மனைக்கோழிப் பைம்பயிரினனே
10கானக்கோழிக் கவர்குரலொடு
நீர்க்கோழிக் கூய்ப்பெயர்க் குந்து
வேயன்ன மென்றோளால்
மயிலன்ன மென்சாயலார்
கிளிகடியினனே
15அகலள்ளற் புள்ளிரீஇயுந்து
யாங்கப், பலநல்ல புலனணியும்
சீர்சான்ற விழுச்சிறப்பிற்
சிறுகண் யானைப் பெறலருந் தித்தன்
செல்லா நல்லிசை யுறந்தைக் குணாது
20நெடுங்கைவேண்மா னருங்கடிப் பிடவூர்
அறப்பெயர்ச்சாத்தன் கிளையேம் பெரும