| பொன்செய் புனைகலத் தேந்தி நாளும் | | 20. | ஒண்டொடி மகளிர் மடுப்ப மகிழ்சிறந் | | தாங்கினி தொழுகுமதி யோங்குவாண் மாற அங்கண் விசும்பி னாரிரு ளகற்றும் வெங்கதிர்ச் செல்வன் போலவுங் குடதிசைத் தண்கதிர் மதியம் போலவும் | | 25. | நின்று நிலைஇய ருலகமோ டுடனே. (56) |
திணை: அது. துறை: பூவைநிலை. அவனை மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் பாடியது.
உரை: ஏற்று வலன் உயரிய - ஆனேற்றை வெற்றியாக உயர்த்த; எரி மருள் அவிர் சடை - அழல் போலும் விளங்கிய சடையினையும்; மாற்றருங் கணிச்சி மணி மிடற்றோனும் - விலக்குதற்கரிய மழுப்படையையுமுடைய நீலமணிபோலும் திருமிடற்றை யுடையோனும்; கடல் வளர் புரி வளை புரையும் மேனி - கடற் கண்ணே வளரும் புரிந்த சங்கை யொக்கும் திரு நிறத்தையுடைய; அடர் வெம் நாஞ்சிற் பனைக் கொடி யோனும் - கொலையை விரும்பும் கலப்பையையும் பனைக்கொடியையு முடையோனும்; மண்ணுறு திரு மணி புரையும் மேனி - கழுவப்பட்ட அழகிய நீலமணி போலும் திரு மேனியையும்; விண் உயர் புட்கொடி விறல் வெய்யோனும் - வானுற வோங்கிய கருடக்கொடியையுமுடைய வென்றியை விரும்புவோனும்; மணி மயில் உயரிய - நீலமணிபோலும் நிறத்தையுடைய மயிற்கொடியை யெடுத்த; மாறா வென்றி - மாறாத வெற்றியையுடைய; பிணி முக வூர்தி ஒண் செய்யோனும் என - அம் மயிலாகிய வூர்தியையுடைய ஒள்ளிய செய்யோனுமென்று சொல்லப்பட்ட; ஞாலம் காக்கும் கால முன்பின் - உலகம் காக்கும் முடிவு காலத்தைச் செய்யும் வலியினையும்; தோலா நல்லிசை நால்வ ருள்ளும் - தோல்வியில்லாத நல்ல புகழினையுமுடைய நால்வ ருள்ளும்; மாற்றரும் சீற்றம் - விலக்குதற்கரிய வெகுட்சியால்; கூற்று ஒத்தீ - கூற்றத்தை யொப்பை; வலி வாலியோனை ஒத்தீ - வலியால் வாலியோனை யொப்பை; புகழ் இகழுநர் அடுநனை ஒத்தீ - புகழால் பகைவரைக் கொல்லும் மாயோனை யொப்பை; முன்னியது முடித்தலின் முருகு ஒத்தீ - கருதியது முடித்தலான் முருகனை யொப்பை; ஆங்காங்கு அவரவர் ஒத்தலின் - அப்படி யப்படி அவரவரை யொத்தலான்; யாங்கும் அரியவும் உளவோ நினக்கு - எவ்விடத்தும் அரியனவும் உளவோ நினக்கு; அதனால் - ஆதலால்; இரவலர்க் கருங்கலம் அருகா தீயா - இரப்போர்க்கும் பெறுதற்கரிய அணிகலங்களைப் பெரிதும் வழங்கி; யவனர் நன்கலம் தந்த தண் கமழ்
|