| அறந்துஞ் சுறந்தைப் பொருநனை யிவனே |
10. | நெல்லு நீரு மெல்லார்க்கு மெளியவென |
| வரைய சாந்தமுந் திரைய முத்தமும் இமிழ்குரன் முரச மூன்றுட னாளும் தமிழ்கெழு கூடற் றண்கோல் வேந்தே பானிற வுருவிற் பனைக்கொடி யோனும் |
15. | நீனிற வுருவி னேமி யோனுமென் |
| றிருபெருந் தெய்வமு முடனின்றா அங் குருகெழு தோற்றமொ டுட்குவர விளங்கி இன்னீ ராகலி னினியவு முளவோ இன்னுங் கேண்மினும் மிசைவா ழியவே |
20. | ஒருவீ ரொருவீர்க் காற்றுதி ரிருவிரும் |
| உடனிலை திரியீ ராயி னிமிழ்திரைப் பௌவ முடுத்தவிப் பயங்கெழு மாநிலம் கையகப் படுவது பொய்யா காதே அதனால், நல்ல போலவும் நயவ போலவும் |
25. | தொல்லோர் சென்ற நெறிய போலவும் |
| காத னெஞ்சினும் மிடைபுகற் கலமரும் ஏதின் மாக்கள் பொதுமொழி கொள்ளா தின்றே போல்கநும் வேலே கொடுவரிக் |
30. | கோண்மாக் குயின்ற சேண்விளங்கு தொடுபொறி |
| நெடுநீர்க் கெண்டையொடு பொறித்த குடுமிய வாகபிறர் குன்றுகெழு நாடே. (58) |