பக்கம் எண் :

172

சோழநன் னாட்டுப் படினே கோழி
உயர்நிலை மாடத்துக் குறும்பறை யசைஇ
10.வாயில் விடாது கோயில் புக்கெம்
பெருங்கோக் கிள்ளி கேட்க விரும்பிசிர்
ஆந்தை யடியுறை யெனினே மாண்டநின்
இன்புறு பேடை யணியத்தன்
நன்புறு நன்கல நல்குவ னினக்கே (67)

     திணை: பாடாண்டிணை. துறை: இயன்மொழி. கோப்பெருஞ்
சோழனைப் பிசிராந்தையார் பாடியது.

     உரை: அன்னச் சேவல் அன்னச் சேவல் - அன்னச் சேவலே
அன்னச் சேவலே; ஆடு கொள் வென்றி அடுபோர் அண்ணல் -
கொல்லுதலைப் பொருந்திய வென்றியையுடைய அடுபோரண்ணல்;
நாடு தலை யளிக்கும் ஒண் முகம் போல - தன்னாட்டைத் தலையளி
செய்யும் விளங்கிய முகம் போல; கோடு கூடு மதியம் முகிழ் நிலா
விளங்கும் - இரண்டு பங்கும் வந்து பொருந்திய மதியம் அரும்பு நிலா
விளங்கும்; மையல் மாலை - தமியோராயினார்க்கு மயக்கத்தைச்
செய்யும் மாலைப் பொழுதின் கண்; யாம் கையறுபு இனைய - யாம்
செயலற்று வருந்த; குமரியம் பெருந் துறை அயிரை மாந்தி -
குமரியாற்றினது பெரிய துறைக்கண்ணே அயிரையை மேய்ந்து;
வடமலைப் பெயர்குவை யாயின் - வடதிசைக்கண் இமயமலைக்
கண்ணே போகின்றாயாயின்; இடையது சோழ நன்னாட்டுப் படினே -
இவ்விரண்டிற்கு மிடையதாகிய நல்ல சோழநாட்டின்கண் சென்று
பொருந்தின்; கோழி - உரையூரின்கண்; உயர்நிலை மாடத்துக்
குறும்பறை அசைஇ உயர்ந்த நிலையையுடைய மாடத்தின்கண்ணே
நினது குறும்பறையோடு தங்கி; வாயில் விடாது கோயில் புக்கு -
வாயில் காவலர்க்கு உணர்த்திவிடாதே தடையின்றிக்
கோயிற்கண்ணே புக்கு; எம் பெருங் கோக் கிள்ளி கேட்க -
எம்முடைய பெருங்கோவாகிய கிள்ளி கேட்ப; இரும் பிசிர் ஆந்தை
அடியுறை எனினே - பெரிய பிசி ரென்னும் ஊரின்கண் ஆந்தையுடைய
அடிக்கீழென்று சொல்லின்; மாண்ட நின் இன்புறு பேடை அணிய -
மாட்சிமையுடைய நினது இன்புறும் பேடை பூண; தன் நன்புறு நன்கலம்
நல்குவன் நினக்கு - தனது விருப்பமுறும் நல்ல அணிகலத்தை
அளிப்பன் நினக்கு எ-று.

     ஆடுகொள் வென்றி யென்பதற்கு, வென்றி மிக்க வென்றி
யெனினுமமையும். குறும் பறை யென்றது? பேடையை, வாயில் விடா
தென்றதற்கு வாயில் காவல் விடவேண்டா தெனினு மமையும். முகிழ் நிலா
வென்பது ஒரு சொன்னடைத்தாய் மதியம் முகிழ் நிலா விளங்கு மென