69. சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளி வளவன் இக் கிள்ளிவளவனும் உரையூரின்கண் ணிருந்து சோழநாட்டை ஆட்சி செய்த வேந்தன். ஒருகால், ஆலத்தூர், கிழா ரென்ற சான்றோர் இவனைக் காண்டற்குச் சென்றார். அங்கே வாயில் காப்போர் ஒரு தடையும் செய்யாது அவரை உட்புக விடுத்தனர். இவனும் அவரை அன்புடன் வரவேற்றான். அங்கே இவனுடன் அவர் சின்னாள் தங்கினார். அப்போது அவர் இவனது தானைச் சிறப்பையும் போர்க்குச் சென்று பாடி வீட்டில் தங்கும் இருப்பையும் வேற்படையில் மாண்பையும் நேரிற் கண்டு மகிழ்ந்தார். முடிவில் இவன் அவர்க்கு மிக்க பொருளை நல்கிச் செல விடுத்தான். இவன் பெற்ற பெருவளத்தைப் பாண னொருவற்குக் கூறி, ஆற்றுப்படுக்கும் வகையில் இப்பாட்டால் வளவனைச் சிறப்பித்தார். | கையது கடனிறை யாழே மெய்யது புரவல ரின்மையிற் பசியே யரையது வேற்றிழை நுழைந்த வேர்நனை சிதாஅர் ஓம்பி யுடுத்த வுயவற் பாண | 5. | பூட்கை யில்லோன் யாக்கை போலப் | | பெரும்புல் லென்ற விரும்பே ரொக்கலை வையக முழுதுடன் வளைஇப் பையென என்னை வினவுதி யாயின் மன்னர் அடுகளி றுயவுங் கொடிகொள் பாசறைக் | 10. | குருதிப் பரப்பிற் கோட்டுமா தொலைச்சிப் | | புலாக்களஞ் செய்த கலாஅத் தானையன் பிறங்குநிலை மாடத் துறந்தை யோனே பொருநர்க் கோக்கிய வேல னொருநிலைப் பகைப்புலம் படர்தலு முரியன் றகைத்தார் | 15. | ஒள்ளெரி விரையு முருகெழு பசும்பூட் | | கிள்ளி வளவற் படர்குவை யாயின் நெடுங்கடை நிற்றலு மிலையே கடும்பகல் தேர்வீ சிருக்கை யார நோக்கி நீயவற் கண்ட பின்றைப் பூவின் | 20. | ஆடும்வண் டிமிராத் தாமரை | | சூடா யாத லதனினு மிலையே. (69) |
திணையும் துறையும் அவை. சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவனை ஆலத்தூர்கிழார் பாடியது.
உரை: கையது - நின் கையகத்து; கடன் நிறை யாழ் - இலக்கண முறைமை நிரம்பிய யாழ்; மெய்யது - உடம்பின்கண்ணது; புரவலரின்மையின்
|