| நத்தத்தனாரும் பெருஞ்சித்திரனாரும் வள்ளல்கள் வரிசையுள் வைத்து இவனைப் பாடியுள்ளனர்.
இவருள், வன்பரணர் கொல்லி மலையைச் சார்ந்த, சுரத்திடத்தே பாண் சுற்றத்தோடு சென்றுகொண்டிருக்கையில், வேட்டங் காரணமாக ஆங்கு வந்திருந்த வல்வி லோரியைக் கண்டு பரிசில் பெற்ற திறத்தை இப்பாட்டின்கட் குறித்திருக்கின்றார். ஓரி யென்பான் வேட்டம் புரியுங்கால், யானை யொன்றை வீழ்த்தற்குப் புலி யொன்று அற்றம் நோக்கியிருப்பதைப் பார்த்துவிட்டான். உடனே அவன் தனது வலிய வில்லில் அம்பு தொடுத்து யானைமேல் எய்தான்: அஃது அவ் யானையை வீழ்த்தி அற்றம் நோக்கி நின்ற புலியின் அகன்ற வாயுள் தைத்து ஊடுருவிச் சென்று கொன்று, வழியில் நின்ற கலைமானை மடித்து, அண்மையிலிருந்து காட்டுப் பன்றியை வீழ்த்தி, அதன் அயலிருந்த புற்றிற்கிடந்த உடும்பின் உடலிற் றைப்புண்டு வீழ்ந்தது. இதனைக் கண்டு பெருவியப்புற்ற வன்பரணர், இத்துணைச் சிறப்பமைந்த வில்லாளனாகிய இவன் ஒரு செல்வத் தோன்றலா மென எண்ணி, தன் பாண்சுற்றத்துடனே அவனை வணங்கித் தலைவன் திரு முன் பாடற்கமைந்த இருபத்தொரு பாடற்றுறையும் பாடி நிற்ப, அவன் தானெய்த மானின் தசையையும் மதுவையும் தன் மலையிற் கிடைக்கும் பொன்னையும் தந்து சிறப்பித் தனுப்பினான் என இப்பாட்டிற் கூறுகின்றார். கொல்லிமலை சேல மாநாட்டில் நாமக்கல்லைச் சார்ந்த சேந்த மங்கலத்துக்கு அருகில் உள்ளது.
| வேழம் வீழ்த்த விழுத்தொடைப் பகழி பேழ்வா யுழுவையைப் பெரும்பிறி துறீஇப் புழற்றலைப் புகர்க்கலை யுருட்டி யுரற்றலைக் கேழற் பன்றி வீழ வயல | 5 | தாழற் புற்றத் துடும்பிற் செற்றும் | | வல்வில் வேட்டம் வலம்படுத் திருந்தோன் புகழ்சால் சிறப்பி னம்புமிகத் திளைக்கும் கொலைவன் யார்கொலோ கொலைவன் மற்றிவன் விலைவன் போலான் வெறுக்கைநன் குடையன் | 10 | ஆரந் தாழ்ந்த வம்பகட்டு மார்பிற் | | சார லருவிப் பயமலைக் கிழவன் ஓரி கொல்லோ வல்லன் கொல்லோ பாடுவல் விறலியோர் வண்ண நீரும் மண்முழா வமைமின் பண்யாழ் நிறுமின் | 15 | கண்விடு தூம்பிற் கள்ளிற்றுயிர் தொடுமின் | | எல்லரி தொடுமி னாகுளி தொடுமின் பதலை யொருகண் பையென வியக்குமின் மதலை மாக்கோல் கைவலந் தமினென் றிறைவ னாகலிற் சொல்லுபு குறுகி |
|