பக்கம் எண் :

322

 

அவனாகத் தகும்; பாடுவல் விறலி ஓர் வண்ணம் - யான் பாடுவேன்,
விறலி, ஒருவண்ணம்; நீரும் முழா மண் அமைமின் - நீங்களும்
முழாவின்கண்ணே மார்ச்சனையையிடுமின்; யாழ் பண் நிறுமின் -
யாழிலே பண்ணை நிறுத்துமின்; கண் விடு தூம்பின் களிற்று உயிர்
தொடுமின் - கண்திறக்கப்பட்ட தூம்பாகிய களிற்றினது  கைபோலும்
வடிவையுடைய பெரு வங்கியத்தை இசையுங்கோள்; எல்லரி தொடுமின்
- சல்லியை வாசியுமின்; ஆகுளி தொடுமின் - சிறுபறையை
அறையுங்கோள்; பதலை ஒரு கண்பையென இயக்குமின் - பதலையில்
ஒரு முகத்தை மெல்லெனக் கொட்டுமின்; மதலை மாக்
கோல் வலம் தம்மின் என்று சொல்லுபு குறுகி - *கரிய கோலைக்
கையின் கண்ணே தாருங்கோள் என்று சொல்லி யணுகி;
இறைவனாகலின் மூவேழ் துறையும் முறையுளிக் கழிப்பி -
தலைவனாதலாலேஇருபத்தொரு பாடல் துறையையும் முறையாற் பாடி
முடித்து; கோ எனப் பெயரிய காலை பின்னர்க் கோவே யென்று
அவன் பெயர் கூறிய காலத்து; ஆங்கு அது தன் பெயராகலின்
நாணி - அவ்விடத்து அவ் வார்த்தை தன் பெயராதலால் நாணி;
மற்று - பின்னை; யாம் நாட்டிடன் நாட்டிடன் வருதும் - யாங்கள்
நாட்டிடந்தோறும் நாட்டிடந்தோறும் சென்று வருவேம்; ஈங்கு ஓர்
வேட்டுவர் இல்லை நின் ஒப்போர் என - இவ்விடத்து ஒரு
வேட்டுவரும் இல்லை நின்னை யொப்போர் என; வேட்டது
மொழியவும் விடாஅன் - யாம்விரும்பியது கூறவும் அதற்குக் காலந்
தாரானாய்; வேட்டத்தில் தான் உயிர் செகுத்த மான் நிணப்
புழுக்கோடு - வேட்டையின்கண் தான் எய்த மானினது
நிணத்தையுடைய தசையினது புழுக்குடனே; ஆன் உருக்கன்ன
வேரியை நல்கி - ஆவின் நெய்யை யுருக்கினாற் போன்ற மதுவைத்
தந்து; தன் மலைப் பிறந்த தாவில் நன் பொன் பன்மணிக்
குவையொடும் விரைஇ தன்னுடைய மலையின்கட் பிறந்த வலியில்லாத
நல்ல பொன்னைப் பல மணித் திரளுடனே கலந்து; கொண்ம் எனச்
சுரத்திடை நல்கியோன் - இதனைக் கொண்மின் எனச் சொல்லிச்
சுரத்திடத்தே எமக்குத் தந்தான்; விடர்ச் சிமை ஒருங்கிருங்
கொல்லிப் பொருநன் - முழையையுடைத்தாகிய உச்சியையுடைய
உயர்ந்த பெரிய கொல்லிக்குத் தலைவன்; ஓம்பா ஈகை விறல்
வெய்யோன் - பாதுகாவாத வண்மையினையுடைய வென்றியை
விரும்புவோன் எ-று.

         புழ லென்றது, ஆகுபெயரால் புழலையுடைய கோட்டை.
களிற்றுயிரென்றது, ஆகுபெயரால் களிற்றினது கைபோலும் வடிவையுடைய
பெருவங்கியத்தை. பாடுவல் விறலி ஓர் வண்ணம் என்றது,


* நமது பிறப்புணர்த்தும் கரிய கோல் என்பது சில ஏடுகளில் இல்லை.