| அவனாகத் தகும்; பாடுவல் விறலி ஓர் வண்ணம் - யான் பாடுவேன், விறலி, ஒருவண்ணம்; நீரும் முழா மண் அமைமின் - நீங்களும் முழாவின்கண்ணே மார்ச்சனையையிடுமின்; யாழ் பண் நிறுமின் - யாழிலே பண்ணை நிறுத்துமின்; கண் விடு தூம்பின் களிற்று உயிர் தொடுமின் - கண்திறக்கப்பட்ட தூம்பாகிய களிற்றினது கைபோலும் வடிவையுடைய பெரு வங்கியத்தை இசையுங்கோள்; எல்லரி தொடுமின் - சல்லியை வாசியுமின்; ஆகுளி தொடுமின் - சிறுபறையை அறையுங்கோள்; பதலை ஒரு கண்பையென இயக்குமின் - பதலையில் ஒரு முகத்தை மெல்லெனக் கொட்டுமின்; மதலை மாக் கோல் வலம் தம்மின் என்று சொல்லுபு குறுகி - *கரிய கோலைக் கையின் கண்ணே தாருங்கோள் என்று சொல்லி யணுகி; இறைவனாகலின் மூவேழ் துறையும் முறையுளிக் கழிப்பி - தலைவனாதலாலேஇருபத்தொரு பாடல் துறையையும் முறையாற் பாடி முடித்து; கோ எனப் பெயரிய காலை பின்னர்க் கோவே யென்று அவன் பெயர் கூறிய காலத்து; ஆங்கு அது தன் பெயராகலின் நாணி - அவ்விடத்து அவ் வார்த்தை தன் பெயராதலால் நாணி; மற்று - பின்னை; யாம் நாட்டிடன் நாட்டிடன் வருதும் - யாங்கள் நாட்டிடந்தோறும் நாட்டிடந்தோறும் சென்று வருவேம்; ஈங்கு ஓர் வேட்டுவர் இல்லை நின் ஒப்போர் என - இவ்விடத்து ஒரு வேட்டுவரும் இல்லை நின்னை யொப்போர் என; வேட்டது மொழியவும் விடாஅன் - யாம்விரும்பியது கூறவும் அதற்குக் காலந் தாரானாய்; வேட்டத்தில் தான் உயிர் செகுத்த மான் நிணப் புழுக்கோடு - வேட்டையின்கண் தான் எய்த மானினது நிணத்தையுடைய தசையினது புழுக்குடனே; ஆன் உருக்கன்ன வேரியை நல்கி - ஆவின் நெய்யை யுருக்கினாற் போன்ற மதுவைத் தந்து; தன் மலைப் பிறந்த தாவில் நன் பொன் பன்மணிக் குவையொடும் விரைஇ தன்னுடைய மலையின்கட் பிறந்த வலியில்லாத நல்ல பொன்னைப் பல மணித் திரளுடனே கலந்து; கொண்ம் எனச் சுரத்திடை நல்கியோன் - இதனைக் கொண்மின் எனச் சொல்லிச் சுரத்திடத்தே எமக்குத் தந்தான்; விடர்ச் சிமை ஒருங்கிருங் கொல்லிப் பொருநன் - முழையையுடைத்தாகிய உச்சியையுடைய உயர்ந்த பெரிய கொல்லிக்குத் தலைவன்; ஓம்பா ஈகை விறல் வெய்யோன் - பாதுகாவாத வண்மையினையுடைய வென்றியை விரும்புவோன் எ-று.
புழ லென்றது, ஆகுபெயரால் புழலையுடைய கோட்டை. களிற்றுயிரென்றது, ஆகுபெயரால் களிற்றினது கைபோலும் வடிவையுடைய பெருவங்கியத்தை. பாடுவல் விறலி ஓர் வண்ணம் என்றது, * நமது பிறப்புணர்த்தும் கரிய கோல் என்பது சில ஏடுகளில் இல்லை. |