பக்கம் எண் :

341

 

“இல்லானை  இல்லாளும்  வேண்டாள்”   என்பதை    மறுத்தொழுகும்
மனைமாண்புடைய மனையாட்டியார்  மனமகிழுமாறு  தமக்குச் “செல்லாச்
செல்வம்”மிகத் தந்து விரைய விடை தருதல் வேண்டுமென வேண்டுகின்றார்.

 உருகெழு ஞாயிற் றொண்கதிர் மிசைந்த
முளிபுற் கானங் குழைப்பக் கல்லென
அதிர்குர லேறொடு துளிசொரிந் தாங்குப்
பசிதினத் திரங்கிய கசிவுடை யாக்கை
5அவிழ்புகு வறியா தாகலின் வாடிய
 நெறிகொள் வரிக்குடர் குளிப்பத் தண்ணெனக்
குய்கொள் கொழுந்துவை நெய்யுடை யடிசில்
மதிசேர் நாண்மீன் போல நவின்ற
சிறுபொ னன்கலஞ் சுற்ற விரீஇக்
10கேடின் றாக பாடுநர் கடும்பென
 அரிதுபெறு பொலங்கல மெளிதினின் வீசி
நட்டோர் நட்ட நல்லிசைக் குமணன்
மட்டோர் மறுகின் முதிரத் தோனே
செல்குவை யாயி னல்குவன் பெரிதெனப்
15பல்புகழ் நுவலுநர் கூற வல்விரைந்
 துள்ளந் துரப்ப வந்தனெ னெள்ளுற்
றில்லுணாத் துறத்தலி னின்மறந் துறையும்
புல்லுளைக் குடுமிப் புதல்வன் பன்மாண்
பாலில் வறுமுலை சுவைத்தனன் பெறாஅன்
20 கூழுஞ் சோறுங் கடைஇ யூழின்
 உள்ளில் வறுங்கலந் திறந்தழக் கண்டு
மறப்புலி யுரைத்து மதியங் காட்டியும்
நொந்தன ளாகி நுந்தையை யுள்ளிப்
பொடிந்தநின் செவ்வி காட்டெனப் பலவும்
25வினவ லானா ளாகி நனவின்
 அல்ல லுழப்போண் மல்லல் சிறப்பச்
செல்லாச் செல்வ மிகுத்தனை வல்லே
விடுதல் வேண்டுவ லத்தை படுதிரை
நீர்சூழ் நிலவரை யுயரநின்
30சீர்கெழு விழுப்புக ழேத்துகம் பலவே.   (160)

     திணையும் துறையு மவை. அவனை அவர் பாடியது,