பக்கம் எண் :

353

 
 தாடாழ் படுமணி யிரட்டும் பூநுதல்
ஆடியல் யானை பாடுநர்க் கருகாக்
கேடி னல்லிசை வயமான் றோன்றலைப்
பாடி நின்றனெ னாகக் கொன்னே
10பாடுபெறு பரிசிலன் வாடினன் பெயர்தலென்
 நாடிழந் ததனினு நனியின் னாதென
வாடந் தனனே தலையெனக் கீயத்
தன்னிற் சிறந்தது பிறிதொன் றின்மையின்
ஆடுமலி யுவகையொடு வருவல்
15ஓடாப் பூட்கைநின் கிழமையோற் கண்டே. (165)

     திணை: அது. துறை: பரிசில் விடை. தம்பியால் நாடு
கொள்ளப்பட்டுக் காடு பற்றியிருந்த குமணனைக் கண்டு, அவன்
தன் வாள் கொடுப்பக் கொண்டுவந்து இளங்குமணற்குக் காட்டிப்
பெருந்தலைச் சாத்தனார் பாடியது.

     உரை: மன்னா உலகத்து மன்னுதல் குறித்தோர் -
எப்பொருளும் நிலையாத  இவ்வுலகத்தின்கண்  நிலைபெறுதலைக்
கருதினோர்; தம் புகழ் நிறீஇத் தாம் மாய்ந்தனர் - தம்முடைய
புகழைப் பூமியிடத்தே நிறுத்தித்  தாங்கள்  இறந்தார்கள்; துன்னரும்
சிறப்பின் உயர்ந்த செல்வர் - நணுகுதற்கரிய  தலைமையையுடைய
மிக்க  செல்வர்; இன்மையின் இரப்போர்க்கு ஈயாமையின்
வறுமையால் இரப்போர்க்குக்கொடாமையின்; தொன்மை மாக்களின்
தொடர்பு அறியலர் - பழைய வண்மையையுடைய மாக்கள் போல்
பின்னும்  தம் பெயரை நிறுத்தி உலகோடு தொடர்ந்து  போதுதலை
யறியார்; தாள் தாழ் படு மணி இரட்டும்  பூ  நுதல்   ஆடியல்
யானை - தாளின்கண்  தாழ்ந்த ஓசையையுடைய   மணி
ஒன்றற்கொன்று  மாறி  யொலிக்கும்   புகர் நுதலையுடைய
வென்றியியன்ற   யானையை;  பாடுநர்க்கு அருகா - பாவலர்க்கு
மிகக்கொடுக்கும்;     கேடில்     நல்லிசை    வயமான்
தோன்றலைப்    பாடி   நின்றனெனாக - அழிவில்லாத  நல்ல
புகழையுடைய    வலிய    குதிரையையுடைய    தலைவனைப்
பாடி நின்றேனாக; கொன்னே - பயனின்றியே;  பாடு  பெறு
பரிசிலன் வாடினன்  பெயர்தல் - பெருமை  பெற்ற  பரிசிலன்
வாடினனாகப் பெயர்தல்; என் நாடு இழந்ததனினும் மிக இன்னாது
என நினைந்து; வாள் தந்தனன் - தலை  எனக்கீய வாளைத்
தந்தான் தனது தலையை எனக்குத் தருவானாக; தன்னில் சிறந்தது
பிறிது ஒன்று இன்மையின் - ஆங்குத்   தருதற்குத் தன்னிற் சிறந்த
பொருள் வேறொன்றில் லாமையின்; ஆடு மலி உவகையொடு
வருவல் - வென்றி மிக்க உவகையான்  
வந்தேன்;