பக்கம் எண் :

356

 
 அருங்கடிப் பெருங்காலை
25 விருந்துற்றநின் றிருந்தேந்துநிலை
 என்றுங், காண்கதில் லம்ம யாமே குடாஅது
பொன்படு நெடுவரைப் புயலேறு சிலைப்பிற்
பூவிரி புதுநீர்க் காவிரி புரக்கும்
தண்புனற் படப்பை யெம்மூ ராங்கண்
30உண்டுந் தின்று மூர்ந்து மாடுகம்
 செல்வ லத்தை யானே செல்லாது
மழையண் ணாப்ப நீடிய நெடுவரைக்
கழைவள ரிமயம் போல
நிலீஇய ரத்தைநீ நிலமிசை யானே.
(166)

     திணை: வாகை. துறை: பார்ப்பன வாகை. சோணாட்டுப்
பூஞ்சாற்றூர்ப் பார்ப்பான் கௌணியன் விண்ணந்தாயனை ஆவூர்
மூலங்கிழார் பாடியது.

    உரை: நன்றாய்ந்த நீள் நிமிர் சடை முது முதல்வன் -
பெரிதும் ஆராயப்பட்ட மிக்க நீண்ட சடையினையுடைய முதிய
இறைவனது; வாய் போகாது - வாக்கை விட்டு நீங்காது; ஒன்று
புரிந்த ஈரிரண்டின்ஆறுணர்ந்த  ஒரு  முது  நூல் - அறமொன்றையே
மேவிய நான்கு கூற்றையுடைத்தாய்  ஆறங்கத்தாலும் உணரப்பட்ட
ஒரு  பழைய நூலாகிய வேதத்துக்கு; இகல் கண்டோர் மிகல்
சாய்மார் - மாறுபட்ட நூல்களைக் கண்டோராகிய புத்தர் முதலாயின
புறச்சமயத்தோரது மிகுதியைச்  சாய்க்க  வேண்டி;  மெய் அன்ன
பொய் உணர்ந்து - அவரது மெய்போன்ற பொய்யை உளப்பட்
டறிந்து; பொய் ஓராது மெய்    கொளீஇ - அப்பொய்ம்மையை
மெய்யென்று  கருதாமல் உண்மைப்பொருளை அவர்களுக்கு ஏற்பச்
சொல்லி; மூவேழ் துறையும் முட்டின்று    போகிய - இருபத்தொரு
வேள்வித்  துறையையும் குறையின்றாகச்  செய்து   முடித்த;  உரை
சால் சிறப்பின் உரவோர் மருக- புகழ் அமைந்த தலைமையையுடைய
அறிவுடையோர் மரபிலுள்ளானே; வினைக்கு வேண்டி நீ பூண்ட
புலப் புல்வாய்க்கலைப் பச்சை - வேள்வித் தொழிற்கு வேண்டி நீ
போர்க்கப்பட்ட காட்டுநிலத்து வாழும் புல்வாய்க் கலையினது
உறுப்புத் தோல்; சுவல் பூண் ஞாண் மிசைப் பொலிய - நினது
தோளின்கண் இடப்பட்ட பூணு நூன்மீதே சிறந்து தோன்ற; மறம்
கடிந்த அருங் கற்பின் - கொடுமையை நீக்கிய பெறுதற்கரிய
கற்பினையும்; அறம் புகழ்ந்த வலை சூடி - அற நூல் புகழப்பட்ட
சாலகத்தைச் சூடி; சிறு நுதல் பேர் அகல் அல்குல் - சிறிய
நுதலினையும் பெரிய அகன்ற அல்குலையும்;