| | | | அருங்கடிப் பெருங்காலை | | 25 | விருந்துற்றநின் றிருந்தேந்துநிலை | | | என்றுங், காண்கதில் லம்ம யாமே குடாஅது பொன்படு நெடுவரைப் புயலேறு சிலைப்பிற் பூவிரி புதுநீர்க் காவிரி புரக்கும் தண்புனற் படப்பை யெம்மூ ராங்கண் | | 30 | உண்டுந் தின்று மூர்ந்து மாடுகம் | | | செல்வ லத்தை யானே செல்லாது மழையண் ணாப்ப நீடிய நெடுவரைக் கழைவள ரிமயம் போல நிலீஇய ரத்தைநீ நிலமிசை யானே. (166) |
திணை: வாகை. துறை: பார்ப்பன வாகை. சோணாட்டுப் பூஞ்சாற்றூர்ப் பார்ப்பான் கௌணியன் விண்ணந்தாயனை ஆவூர் மூலங்கிழார் பாடியது.
உரை: நன்றாய்ந்த நீள் நிமிர் சடை முது முதல்வன் - பெரிதும் ஆராயப்பட்ட மிக்க நீண்ட சடையினையுடைய முதிய இறைவனது; வாய் போகாது - வாக்கை விட்டு நீங்காது; ஒன்று புரிந்த ஈரிரண்டின்ஆறுணர்ந்த ஒரு முது நூல் - அறமொன்றையே மேவிய நான்கு கூற்றையுடைத்தாய் ஆறங்கத்தாலும் உணரப்பட்ட ஒரு பழைய நூலாகிய வேதத்துக்கு; இகல் கண்டோர் மிகல் சாய்மார் - மாறுபட்ட நூல்களைக் கண்டோராகிய புத்தர் முதலாயின புறச்சமயத்தோரது மிகுதியைச் சாய்க்க வேண்டி; மெய் அன்ன பொய் உணர்ந்து - அவரது மெய்போன்ற பொய்யை உளப்பட் டறிந்து; பொய் ஓராது மெய் கொளீஇ - அப்பொய்ம்மையை மெய்யென்று கருதாமல் உண்மைப்பொருளை அவர்களுக்கு ஏற்பச் சொல்லி; மூவேழ் துறையும் முட்டின்று போகிய - இருபத்தொரு வேள்வித் துறையையும் குறையின்றாகச் செய்து முடித்த; உரை சால் சிறப்பின் உரவோர் மருக- புகழ் அமைந்த தலைமையையுடைய அறிவுடையோர் மரபிலுள்ளானே; வினைக்கு வேண்டி நீ பூண்ட புலப் புல்வாய்க்கலைப் பச்சை - வேள்வித் தொழிற்கு வேண்டி நீ போர்க்கப்பட்ட காட்டுநிலத்து வாழும் புல்வாய்க் கலையினது உறுப்புத் தோல்; சுவல் பூண் ஞாண் மிசைப் பொலிய - நினது தோளின்கண் இடப்பட்ட பூணு நூன்மீதே சிறந்து தோன்ற; மறம் கடிந்த அருங் கற்பின் - கொடுமையை நீக்கிய பெறுதற்கரிய கற்பினையும்; அறம் புகழ்ந்த வலை சூடி - அற நூல் புகழப்பட்ட சாலகத்தைச் சூடி; சிறு நுதல் பேர் அகல் அல்குல் - சிறிய நுதலினையும் பெரிய அகன்ற அல்குலையும்; |