| ஈண்டும் இவனென்றது பரிசிலனை. மற்றும் மற்றும் வினவுந் தெற்றென என்றுபாடமோதுவாரு முளர்.
விளக்கம்: மரம் பழுத்த விடத்துப் புள்ளினம் தத்துங் கிளையோடு போந்து கனியுண்டு களித்து ஆரவாரித்தல் இயல்பாதலின், யாணர்ப் பழுமரம் புள்ளிமிழ்ந்தன்ன வூணொலி யரவம்என்றார்; கனிபொழி கானங் கிளையொ டுணீஇய, துனைபறை நிவக்கும் புள்ளினம் (மலைபடு.54-5) என்பது காண்க. எறும்பினம் தரையிலுள்ள அளைகளில் வாழ்வன வாதலாலும், மழைபெய்து விடின், அளைக்கண் நீர் புக்கு அவற்றின் முட்டைகளைச் சிதைக்குமாகலானும், மழை வரவு காட்டும் காற்றினைக் கொண்டு அறிந்து மேட்டிடத்து அளைகளில் தம் முட்டைகளைக் கொண்டு சேர்க்கும் இயல்பினவாம். யானைகள் தம் முடற்பெருமை குறித்துத் தம்முள் அணிவகுத்துச் சேறல் போல, எறும்புகளும் தம் மினப் பன்மை குறித்துச் சாரை சாரையாய் ஒழுங்குகொண்டு செல்லும் இயல்பினவாம். பெய்யா வெழிலியென்று பாடமாயின், அதற்கு எறும்பு முட்டை கொண்டேகுங் காலத்துப் பெய்யாததுபோல் தோன்றும் எழிலி யெனக் கூறினும் அமையும். பெய்விடம் என்ற விடத்து இடம் காலம் குறித்து நின்றது. வன்புலத்தில் நீர் அளைகளில் சுவறாதாகலின், வற்புலம் சேரும்என்றார். பசியை நோயென்றும், உணவை மருந்தென்றும் வழங்குமாறுபற்றி, உணவு வழங்கும் பண்ணனை, பசிப்பிணி மருத்துவன்என்றார். விதுப்பு, விருப்பத்தாலுண்டாகும் உள்ளத் துடிப்பு. இவன் கடும்பினது இடும்பை காண்கஎன்றானாகலின், அதற்கேற்பக் கண்டும் மற்றும் வினவுதுமாகலின், தெற்றென எமக்குக் கூறுமின்என்றான். பசியை நோயென்றும், உணவை மருந்தென்றும் வழங்குமாறுபற்றி, உணவு வழங்கும் பண்ணனை, பசிப்பிணி மருத்துவன் என்றார். விதுப்பு, விருப்பத்தாலுண்டாகும் உள்ளத் துடிப்பு. இவன் கடும்பினது இடும்பை காண்க என்றானாகலின், அதற்கேற்பக் கண்டும் மற்றும் மற்றும் வினவுது மாகலின், தெற்றென எமக்குக் கூறுமின் என்றான். அணித்தோ சேய்த்தோ கூறுமின் என்னாநின்றான் என்பதில் என்னாநின்றா னென ஒருசொல் வருவித்துப் பாணன் கூற்றினை முடித்தல் வேண்டிற்று. அதனால், இதற்கு........உரைக்கப்பட்டதென்றார். பக்கப்பாணரை நோக்கிக் கூறுமிடத்து, காண்க இவன்என்றவித்து, இவன் என்றது பரிசிலனையாதலின், ஈண்டும்........பரிசிலனைஎன்றார். ஈண்டுக் காட்டப்படும் உரை வேறுபாடுகள் அனைத்தும் பொருள் வகையில் பொருத்தமுடையவே.
174. மலையமான் சோழிய வேனாதி திருக்கண்ணன்
இத் திருக்கண்ணன் மலையமான் திருமுடிக்காரியின் வழிவந்தோனாவன். இவனைக் காரியின் மக்களுள் ஒருவனாகவும் கருதுகின்றனர். சோழவேந்தர்கட்குத் துணைபுரிந்து அதனால் ஏனாதி யென்னும் மாராயம் பெற்றதுபற்றி, இவனைச் சான்றோர் சோழிய வேனாதி திருக்கண்ணன் என்று குறிக்கின்றனர். மலையமான் திருமுடிக்காரி இறந்தபின் இவனே அவனது நாட்டுக்கரசனாகிச் சிறந்தான். இவனுடைய முன்னோர்கள்,ஒருகால் சோழநாட்டு வேந்தன் ஒருவன் தன் பகைவரொடு பொருது வெல்லும் வலியழிந்து அஞ்சி யோடி மலையமான்களுக்குரிய முள்ளூரின் கண் ஒளித்திருந்தானாக, சோழநாடு ஞாயிற்றை யிழந்த உலகம்போல அரசனை யிழந்து வருந்துவதாயிற்று. |