பக்கம் எண் :

377

 
 கோடை நீடிய பைதறு காலை
இருநில நெளிய வீண்டி
உருமுரறு கருவிய மழைபொழிந் தாங்கே.
(174)

     திணை: வாகை. துறை: அரசவாகை. மலையமான் சோழிய
வேனாதி * திருக்கண்ணனை மாறோக்கத்து நப்பசலையார்பாடியது.

     உரை: அணங்குடை அவுணர் கணம் கொண்டு ஒளித் தென -
பிறரை வருத்தும் அச்சத்தினையுடைய அசுரர் திரள் கொண்டுபோய்
மறைத்தார்களாக; சேண் விளங்கு சிறப்பின் ஞாயிறு காணாது -
சேய்மைக்கண்ணே விளங்காநின்ற தலைமையினையுடைய ஞாயிற்றைக்
காணாமையால்; இருள் கண் கெடுத்த பருதி ஞாலத்து - இருளானது
உலகத்தாரது கண்ணை மறைத்த வட்டமாகிய உலகத்தினது; இடும்பை
கொள் பருவரல் தீர - நோய் கொண்ட துன்பம் நீங்கும் பரிசு; கடுந்
திறல் அஞ்சன உருவன் - மிக்க வலியை யுடைய அஞ்சனம்போலும்
நிறத்தையுடைய திருமேனியையுடைய கண்ணன்; தந்து நிறுத் தாங்கு -
அந்த ஞாயிற்றைக் கொண்டுவந்து இவ் வுலகத்தின்கண் அந்த காரம்
நீங்கும் பரிசு ஆகாயத்தின்கண்ணே நிறுத்தினாற்போல; அரசிழந்
திருந்த அல்லற்காலை - பகை வேந்தரோடு பொருது உடைந்து
போதலால் தம் வேந்தனையிழந்துழலும் இன்னாமையையுடைய
பொழுதின்கண்; முரசு எழுந் திரங்கும் முற்றமொடு - முரசு கிளர்ந்து
முழங்கும் செண்டு வெளியையுடைய கோயிலுடனே; கரையைப் பொருது
இரங்கு புனல் நெரி தரு மிகு பெருங் காவிரி - கரையைப் பொருது
முழங்கும் நீராரே யுடைந்து ஆழ்ந்தோடுகின்ற மிக்க பெரிய
காவிரியையுடைய; மல்லல் நன்னாட்டு அல்லல் தீர - வளவிய நல்ல
நாட்டினது துயரம் கெட; பொய்யா நாவின் கபிலன் பாடிய -
பொய்யாத நாவினையுடைய கபிலனாற் பாடப்பட்ட; மை யணி
நெடுவரை ஆங்கண் - முகி லணிந்த பெரிய மலையிடத்து; ஒய்யென -
விரைய; செருப்புகல் மறவர் - செல்புறங் கண்ட - போரை விரும்பும்
மறவர் ஓடு புறங் கண்ட; எள்ளறு சிறப்பின் முள்ளூர் மீமிசை -
இகழ்ச்சியற்ற தலைமையினை யுடைய முள்ளூரின் மலையுச்சியின்கண்;
அரு வழி இருந்த பெருவிறல் வளவன் - பிறரால் காண்டற்கரிய
இடத்தின் கண் இருந்த பெரிய வென்றியையுடைய சோழனது; மதி
மருள் வெண்குடை காட்டி - திங்கள் போலும் வெண்குடையைத்
தோற்றுவித்து; அக் குடை புதுமையின் நிறுத்த புகழ் மேம்படுந -
அக்குடையைப் புதுமையுண்டாக நிலைபெறுவித்த புகழ் மேம்படுந;
விடர்ப்


* திருக்கண்ணனுக்கு மாறாகத் திருக்கிள்ளி யென்று பாடங்கூறுவதும் உண்டு. அப் பாடல் பொருந்துவதன்று.