| அமரகத்து இரும்பு சுகைக்கொண்ட விழுப்புண் நோய் தீர்ந்து - அந்தப் போரின்கண் படைக்கலங்கள் சுவைக்கொடை சிறந்த புண்ணாகிய நோய் தீர்ந்து; மருந்துகொள் மரத்தின் வாள் வடு மயங்கி - மருந்து வாங்கிக்கொள்ளப் பட்ட மரம்போல வாளுற்ற வடு ஒன்றோடொன்று விரவி; வடு வின்று வடிந்த யாக்கையன் - ஆண்மைக் குறைபாடின்மையின் வசையின்றி அழகுபெற்ற உடம்பை யுடையனாய்; கொடையெதிர்ந்து வண்மையை யேற்றுக்கொண்டு; ஈர்ந்தையோன் - ஈர்ந்தையென்னு மூரின்கண்ணே யிருந்தான்; பாண் பசிப் பகைஞன் - பாணரது பசிக்குப் பகைவனாயவன்; இன்மை தீரவேண்டின் - நினது வறுமை நீங்க வேண்டுவையாயின்; நீயும் வம் மோ - எம்முடனே நீயும் வாராய்; முதுவாய் இரவல - முதிய வா யையுடைய இரவல; யாம்தன் இரக்குங் காலை - யாம் தன்னை யிரக்கும்பொழுது; தான் எம் உண்ணா மருங்குல் காட்டி - தான் எம்முடைய உண்ணாத மருங்கினைக் காட்டி; தன்னூர்க் கருங்கைக் கொல்லனை இரக்கும் - தன்னுடைய ஊரின் வலிய கையினையுடைய கொல்லனை வேண்டிக் கொள்ளாநிற்கும் அவன்; திருந்திலை நெடுவேல் வடித்திசின் என - திருந்தின இலையையுடைய நெடிய வேலை வடிப்பாயாக எனச் சொல்லி எ-று.
பாண் பசிப் பகைஞன், ஈர்ந்தையோன்; அவன் தன்னை யாம் இரக்குங்காலைத் தான் எம் மருங்கைக் காட்டி, வேலை வடித்திசின் எனக் கொல்லனை யிரக்கும்; இரவல, இன்மை தீரவேண்டின், எம்மொடு நீயும் வருவாயாக, வெனக் கூட்டி வினைமுடிவு செய்க. இரக்குமென்று இழித்துக் கூறியது, பலகாலும் வடிக்க வேண்டுதலானும் பசிக்கும் உதவ வேண்டுதலானும்.
விளக்கம்: நிரப்பாது கொடுத்தலாவது, இலனென்னும் எவ்வம் உரையாவாறு கொடுத்தல்; நாடோறும் தொடர்ந்து கொடுத்தாலன்றி, நிரப்பாது கொடுக்கும் கொடையாகாமையின், நாடோறும் தொடர்ந்து கொடுக்கும் என்று உரைத்தல். நிரப்பு, இன்மை. இல்லென இரந்தோர்க்கொன் றீயாமை இளிவு (கலி.2) என்பவாகலின், இல்லென மறுத்தல் சிறுமையாயிற்று. இரும்பென்றது, இரும்பாற் செய்யப்பட்ட போர்க் கருவிகள், விழுப்புண், முகத்தினும் மார்பினும் பட்ட புண். மருந்துகொள் மரம், ஈண்டு அத்திமரம் என்க. அத்திரத்தின் பால் புண்ணுக்கிடுப. அதனால் அதன் அடிப்பகுதி வெட்டுப்பட்ட வடுக்கள் நிரம்பியிருத்தலின், வடுப்பட்ட யாக்கைக்கு உவகையாயிற்று. வாஅள் வடு நிறைந்திருப்பினும், ஆண்மைக்குறைவா லுண்டாகும் வசையும் மெய்வலிக் குறைவாலுளதாகும் மெலியும் இல்லாதவன் என்றற்கு, வசையின்று வடிந்த யாக்கையன்என்றார். தன் தாணிழற்கீழ் வாழும் கொல்லனைத் தான் இரத்தல் அமையாதாகலின், அதற்கு அமைதிகூறல் வேண்டி, இரங்கு......உதவ வேண்டுதலானும்என்று உரைகாரர் கூறினார். |