பனி யென்றும் வெயிலென்றும் பாரேன்; கற்புடை என் மனைவியை நினைந்து யான் செல்கின்றேன் என்ற கருத்தைப் புலப்படுத்தினார். இலவந்திகைப்பள்ளித் துஞ்சிய நன்மாறனும், தவற்றுக்கிரங்கி அவர்க்கு வேண்டுவன நல்கிவிடுத்தான்.
| ஒல்லுவ தொல்லு மென்றலும் யாவர்க்கும் ஒல்லா தில்லென மறுத்தலு மிரண்டும் ஆள்வினை மருங்கிற் கேண்மைப் பாலே ஒல்லா தொல்லு மென்றலு மொல்லுவ | 5 | தில்லென மறுத்தலு மிரண்டும் வல்லே | | இரப்போர் வாட்ட லன்றியும் புரப்போர் புகழ்குறை படூஉம் வாயி லத்தை அனைத்தா கியரினி யிதுவே யெனைத்தும் சேய்த்துக் காணாது கண்டன மதனால் | 10 | நோயில ராகநின் புதல்வர் யானும் | | வெயிலென முனியேன் பனியென மடியேன் கல்குயின் றன்னவென் னல்கூர் வளிமறை நாணல தில்லாக் கற்பின் வாணுதல் மெல்லியற் குறுமக ளுள்ளிச் | 15 | செல்வ லத்தை சிறக்கநின் னாளே. (196) |
திணை: பாடாண்டிணை. துறை: பரிசில் கடாநிலை. பாண்டியன் இலவந்திகைப்பள்ளித் துஞ்சிய நன்மாறன் பரிசில் நீட்டித்தானை ஆவூர் மூலங்கிழார் பாடியது.
உரை: ஒல்லுவது ஒல்லும் என்றலும் - தம்மாற் கொடுக்க இயலும் பொருளை இயலுமென்று சொல்லிக் கொடுத்தலும்; யாவர்க்கும் ஒல்லாது இல்லென மறுத்தலும் - யாவர்க்கும் தம்மாற் கொடுக்க இயலாத பொருளை இல்லை யென்று சொல்லி மறுத்தலுமாகிய; இரண்டும் ஆள்வினை மருங்கில் கேண்மைப் பால் - இரண்டும் தாளாண்மைப் பக்கத்து உளவாகிய நடபின் கூற்றினுள்ளன; ஒல்லாது ஒல்லும் என்றலும் - தனக்கு இயலாததனை இயலுமென்றலும்; ஒல்லுவது இல்லென மறுத்தலும் - இயலும் பொருளை இல்லையென்று மறுத்தலுமாகிய; இரண்டும் வல்லே இரப்போர் வாட்டம் - இரண்டும் விரைய இரப்போரை மெலிவித்தல்; அன்றியும் புரப்போர் புகழ் குறைபடூஉம் வாயில் - அன்றியும் ஈவோர் புகழ் குறைபடும் வழியாம்; இனி அனைத்தாகியர் இப்பொழுது நீ எம்மளவிற் செய்த செய்தியும் அத்தன்மைத்தாகுக; இது எனைத்துத் சேய்த்துக் காணாது கண்டனம் - இஃது எத்துணையும் எங்குடியிலுள்ளார் முன்பு காணாதது யாம் கண்டேம்; அதனால் - அத் தீங்கினால்; நின் புதல்வர் நோயிலராக - நின் பிள்ளைகள்நோயின்றியே யிரப்பாராக; |