பக்கம் எண் :

47

    

கூறுகின்றார். சிறையினின்று இவன்  தப்பிச்  சென்ற   திறத்தை,  தான்
கைப்படுக்கப்பட்ட  குழியினின்றும்  கரையைக் குத்தித் தப்பிப்போகும்
யானை யொன்றின் செயலோ டுவமித்திருப்பது மிக்க நயமுடையதாகும்.

 தென்குமரி வடபெருங்கல்
குணகுடகட லாவெல்லை
குன்றுமலை காடுநா
டொன்றுபட்டு வழிமொழியக்
5.கொடிதுகடிந்து கோறிருத்திப்
 படுவதுண்டு பகலாற்றி
இனிதுருண்ட சுடர்நேமி
முழுதாண்டோர் வழிகாவல
குலையிறைஞ்சிய கோட்டாழை
10.அகல்வயன் மலைவேலி
  நிலவுமணல் வியன்கானற்
றெண்கழிமிசைச் சுடர்ப்பூவின்
தண்டொண்டியோ ரடுபொருந
மாப்பயம்பின் பொறைபோற்றாது
15. நீடுகுழி யகப்பட்ட
 பீடுடைய வெறுழ்முன்பிற்
கோடுமுற்றிய கொல்களிறு
நிலைகலங்கக் குழிகொன்று
கிளைபுகலத் தலைக்கூடியாங்கு
20. நீபட்ட வருமுன்பிற்
 பெருந்தளர்ச்சி பலருவப்பப்
பிறிதுசென்று மலர்தாயத்துப்
பலர்நாப்பண் மீக்கூறலின்
உண்டாகிய வுயர்மண்ணும்
25. சென்றுபட்ட விழுக்கலனும்
  பெறல்கூடு மிவனெஞ் சுறப்பெறி னெனவும்
ஏந்துகொடி யிறைப்புரிசை
வீங்குசிறை வியலருப்பம்
இழந்துவைகுது மினிநாமிவன்
30. உடன்றுநோக்கினன் பெரிதெனவும்
 வேற்றரசு பணிதொடங்குநின்
ஆற்றலொடு புகழேத்திக்