பக்கம் எண் :

52

    
  முழங்கு முந்நீர் முழுவதும் வளைஇப்
பரந்துபட்ட வியன் ஞாலம்
தாளிற் றந்து தம்புகழ் நிறீஇ
ஒருதா மாகிய வுரவோ ரும்பல்
5.ஒன்றுபத் தடுக்கிய கோடிகடை யிரீஇய
 பெருமைத் தாகநின் னாயு டானே
நீர்த்தாழ்ந்த குறுங்காஞ்சிப்
பூக்கதூஉ மினவாளை
நுண்ணாரற் பருவராற்
10. குரூஉக்கெடிற்ற குண்டகழி
  வானுட்கும் வடிநீண்மதில்
மல்லன்மூதூர் வயவேந்தே
செல்லு முலகத்துச் செல்வம் வேண்டினும்
ஞாலங் காவலர் தோள்வலி முருக்கி
15. ஒருநீ யாகல் வேண்டினுஞ் சிறந்த
 நல்லிசை நிறுத்தல் வேண்டினு மற்றதன்
தகுதி கேளினி மிகுதி யாள
நீரின் றமையா யாக்கைக் கெல்லாம்
உண்டி கொடுத்தோ ருயிர்கொடுத் தோரே
20. உண்டி முதற்றே யுணவின் பிண்டம்
  உணவெனப் படுவது நிலத்தொடு நீரே
நீரு நிலனும் புணரி யோரீண்
டுடம்பு முயிரும் படைத்திசி னோரே
வித்திவா னோக்கும் புன்புலங் கண்ணகன்
25.வைப்பிற் றாயினு நண்ணி யாளும்
 இறைவன் றாட்குத வாதே யதனால்
அடுபோர்ச் செழிய விகழாது வல்லே
நிலனெளி மருங்கி னீர்நிலை பெருகத்
தட்டோ ரம்ம விவட்டட் டோரே
30. தள்ளா தோரிவட் டள்ளா தோரே. (18)

     திணை : பொதுவியல்; துறை: முதுமொழிக்காஞ்சி. பாண்டியன்
நெடுஞ்செழியனைக் குடபுலவியனார் பாடியது.

     உரை: முழங்கு  முந்நீர்  முழுவதும்  வளைஇ  - ஒலிக்கின்ற
கடலானது முழுவதும் சூழப்பட்டு; பரந்து பட்ட வியன் ஞாலம் -
பரந்து