| தோடுகொள் வேலின் றோற்றம் போல |
10. | ஆடுகட் கரும்பின் வெண்பூ நுடங்கும் |
| நாடெனப் படுவது நினதே யத்தை, ஆங்க நாடுகெழு செல்வத்துப் பீடுகெழு வேந்தே நினவ கூறுவ லெனவ கேண்மதி அறம்புரிந் தன்ன செங்கோ னாட்டத்து |
15. | முறைவேண்டு பொழுதிற் பதனெளி யோரீண் |
| டுறைவேண்டு பொழுதிற் பெயல்பெற் றோரே ஞாயிறு சுமந்த கோடுதிரள் கொண்மூ மாக விசும்பி னடுவுநின் றாங்குக் கண்பொர விளங்குநின் விண்பொரு வியன்குடை |
20. | வெயின்மறைக் கொண்டன்றோ வன்றே வருந்திய |
| குடிமறைப் பதுவே கூர்வேல் வளவ வெளிற்றுப்பனந் துணியின் வீற்றுவீற்றுக் கிடப்பக் களிற்றுக்கணம் பொருத கண்ணகன் பறந்தலை வருபடை தாங்கிப் பெயர்புறத் தார்த்துப் |
25. | பொருபடை தரூஉங் கொற்றமு முழுபடை |
| ஊன்றுசான் மருங்கி னீன்றதன் பயனே மாரி பொய்ப்பினும் வாரி குன்றினும் இயற்கை யல்லன செயற்கையிற் றோன்றினும் காவலர்ப் பழிக்குமிக் கண்ணகன் ஞாலம் |
30. | அதுநற் கறிந்தனை யாயி னீயும் |
| நொதும லாளர் பொதுமொழி கொள்ளாது பகடுபுறந் தருநர் பார மோம்பிக் குடிபுறந் தருகுவை யாயினின் அடிபுறந் தருகுவ ரடங்கா தோரே. (35) |