பக்கம் எண் :

99

    
 தோடுகொள் வேலின் றோற்றம் போல
10. ஆடுகட் கரும்பின் வெண்பூ நுடங்கும்
 நாடெனப் படுவது நினதே யத்தை, ஆங்க
நாடுகெழு செல்வத்துப் பீடுகெழு வேந்தே
நினவ கூறுவ லெனவ கேண்மதி
அறம்புரிந் தன்ன செங்கோ னாட்டத்து
15. முறைவேண்டு பொழுதிற் பதனெளி யோரீண்
 டுறைவேண்டு பொழுதிற் பெயல்பெற் றோரே
ஞாயிறு சுமந்த கோடுதிரள் கொண்மூ
மாக விசும்பி னடுவுநின் றாங்குக்
கண்பொர விளங்குநின் விண்பொரு வியன்குடை
20. வெயின்மறைக் கொண்டன்றோ வன்றே வருந்திய
  குடிமறைப் பதுவே கூர்வேல் வளவ
வெளிற்றுப்பனந் துணியின் வீற்றுவீற்றுக் கிடப்பக்
களிற்றுக்கணம் பொருத கண்ணகன் பறந்தலை
வருபடை தாங்கிப் பெயர்புறத் தார்த்துப்
25. பொருபடை தரூஉங் கொற்றமு முழுபடை
 ஊன்றுசான் மருங்கி னீன்றதன் பயனே
மாரி பொய்ப்பினும் வாரி குன்றினும்
இயற்கை யல்லன செயற்கையிற் றோன்றினும்
காவலர்ப் பழிக்குமிக் கண்ணகன் ஞாலம்
30. அதுநற் கறிந்தனை யாயி னீயும்
 நொதும லாளர் பொதுமொழி கொள்ளாது
பகடுபுறந் தருநர் பார மோம்பிக்
குடிபுறந் தருகுவை யாயினின்
அடிபுறந் தருகுவ ரடங்கா தோரே. (35)

     திணை: அது. துறை: செவியறிவுறூஉ. அவனை வெள்ளைக் குடி
நாகனார் பாடிப் பழஞ் செய்க் கடன் வீடு கொண்டது.


     உரை: நளி யிரு முந்நீர் ஏணியாக - நீர் செறிந்த பெரிய கடல்
எல்லையாக; வளி யிடை வழங்கா - காற்று ஊடு போகாத; வானம்
சூடிய மண்  திணி  கிடக்கை - வானத்தைச்  சூடிய  மண்செறிந்த
உலகத்தின்கண்; தண் தமிழ்க் கிழவர் - குளிர்ந்த தமிழ்நாட்டிற்
குரியராகிய; முரசு முழங்கு தானை மூவருள்ளும் - முரசொலிக்கும்
படையினையுடைய மூவேந்தருள்ளும்; அரசெனப்  படுவது  நினது -
அரசென்றற்குச் சிறப்புடையது நின்னுடைய அரசே; பெரும-; அலங்கு
கதிர்க் கனலி நால்வயின் தோன்றினும் -