15 | நிரையிவட் டந்து நடுக லாகிய | | வென்வேல் விடலை யின்மையிற் புலம்பிக் கொய்ம்மழித் தலையொடு கைம்மையுறக் கலங்கிய கழிகல மகடூஉப் போல புல்லென் றனையாற் பல்லணி யிழந்தே. |
திணையும் துறையு மவை...ஆவூர் மூலங்கிழார் பாடியது.
உரை: அந்தோ-; எந்தை அடையாப் பேரில் - என்னிறைவனது அடையாத பெரிய இல்லே; வண்டுபடு நறவின் தண்டாமண்டையொடு - வண்டுகள் படியும் மதுவினால் ஒழியாத மண்டையுடனே; வரையாப் பெருஞ்சோற்று முரிவாய் முற்றம் யாவர்க்கும் வரையாமல் வழங்கும் மிக்க சோற்றையுடைய முரிந்த குறட்டையுடைத்தாகிய முற்றம்; வெற்று யாற்று அம்பியின் எற்று - நீரற்று யாற்றின் ஓடம் எத்தன்மைத்து; அற்றாக கண்டனென் மன்ற - அத்தன்மைத்தாகக் கண்டேன் நிச்சயமாக; என் கண் சோர்க - என் கண்மணி சோர்ந்து வீழ்வனவாக; வையங் காவலர் வளங்கெழு திருநகர் - உலகத்தைக்காக்கும் வேந்தருடைய செல்வமிக்க திருநகரின்கண்; மையல்யானை அயா வுயிர்த்தன்ன - மதத்தான் மயங்கிய யானை உயங்குதலான் நெட்டுயிர்ப்புக் கொண்டாற் போன்ற; நெய்யுலை சொரிந்த மையூன் ஓசை - நெய் காய்கின்ற உலையின்கண் சொரியப்பட்ட ஆட்டிறைச்சியினது ஓசையையுடைபொரியலை; புதுக்கண் மாக்கள் செதுக்கண் ஆர - புது மாந்தருடைய ஒளிமழுங்கிய கண்கள் நிறைய; பயந்தனை முன்மன்- உண்டாக்கினாய் முன்பு அது கழிந்தது; இனியே - இப்பொழுது; பல் லா தழீஇய - பல ஆனிரையைக் கைக்கொண்ட; கல்லா வல்வில் - கற்கவேண்டாத வலிய விற்படையை; உழைக்குரல் கூகை அழைப்ப-தன்னிடத்தே குரலையுடைய கூகை தன் இனத்தை அழைக்கும்படி; ஆட்டி -அலைத்து; நாகு முலையன்ன - நாகனிது முலை போன்ற; நறும் பூங் கரந்தை- நறிய புவையுடைய கரந்தையை; விரகறியாளர் மரபின ் சூட்ட - அறிவுடையோர் சூட்டும் முறைமையிலே சூட்ட; நிரை இவண் தந்து - நிரையை இவ்வூரின்கண் மீட்டுத் தந்து; நடுகல் ஆகிய வென்வேல் விடலை இன்மையின் - நடப்பட்ட கல்லாகியவென்றி வேலையுடைய இறைவன் இல்லாமையால்; புலம்பி - தனித்து; கொய்ம்மழித் தலையொடு - கொய்யப்பட்ட மொட்டையாகிய தலையுடனே; கைம்மை உறக் கலங்கிய கைம்மை நோன்பு மிகக் கலக்கமுற்ற; கழிகல மகடூஉப் போல- ஒழிக்கப்பட்ட அணிகலத்தையுடைய அவன் மனைவியை யொப்ப; புல்லென்றனை பல்லணி இழந்து - பொலிவழிந்தனை பல அழழும் இழந்து; எ - று. |