இவ்விடை பெருங் கடுங்         கோவின் புலமையுள்ளத்தை இயக்கி இப்பாட்டு          வெளி வருவதாயிற்று. இப்பாட்டு இடையிடையே சிதைந்துள்ளது.
  |   | எஃகுளங்             கழிய விருநில மருங்கின்             அருங்கட னிறுத்த பெருஞ்செ யாளனை             யாண்டுள னோவென வினவுதி யாயிற் |  |   | .......................... |  |   | வருபடை             தாங்கிய கிளர்தா ரகலம் |  | 5 | அருங்கட             னிறுமார் வயவ ரெறிய |  |   | உடம்புந்             தோன்றா வுயிர்கெட் டன்றே             மலையுநர் மடங்கி மாறெதிர் கிழியத் |  |   | .......................... |  |   | அலகை             போகிச் சிதைந்துவே றாகிய             பலகை யல்லது களத்தொழி யாதே |  | 10 | சேண்விளங்கு             நல்லிசை நிறீஇ |  |   | நாநவில்             புலவர் வாயு ளானே. |  
    திணை...பாலைபாடிய         பெருங்கடுங்கோ பாடியது.
               உரை:         எஃகு உளம் கழிய - பகைவர் எறிந்த வேல் நெஞ்சிற்          பாய்ந்துருவிச் செல்ல; இருநில மருங்கின் - பெரிய நிலத்தின்கண் இருந்து;          அருங்கடன் இறுத்த பெருஞ் செயாளனை - ஆற்றுதற்கரிய கடமையினை          ஆற்றிய மிக்க செய்கையையுடைய சான்றோனாகிய மறவனை; யாண்டுளன்          என வினவுதி - எவ்விடத்துள்ளான் என வினவுகின்றாய்; ஆயின் -          ஆராயுமிடத்து;...வருபடை   தாங்கிய   கிளர்தார்  அகலம்         - தன்னைக்          குறித்துவரும் மாற்றார் படையை எதிரேற்றற்குக் கிளர்ந்தெழும்          மாலையணிந்த மார்பை;  அருங்கடன்  இறுமார்  வயவர்  எறிய                  - தம்முடைய  அரிய கடனையாற்றுதல் வேண்டிப் பகைவர் எறிதலால்;          உடம்பும் தோன்றாஉயிர் கெட்டன்று - அம்பும் வேலும் மொய்த்து உடம்பும்          கட்புலனாகாத உயிரும் கெட்டன; மலையுநர் மடங்கி மாறு எதிர் கழிய -          பொருகின்ற பகைவர் பிறக்கிட்டு முரணவிந்து கெடுதலால்...அலகை போகிச்          சிதைந்து வேறாகிய பலகையல்லது - காக்கும் அமைதி கெட்டுச்          சிதைந்து துணி துணியாகிய கேடக  மொழிய;  களத்து  ஒழியாது -          போர்க்களத்தே  கிடந்தொழியாமல்;சேண்விளங்கு நல்லிசை நிறீஇ -          திசைமுற்றும் பரவி விளங்கும் நல்ல புகழை நிலைநாட்டி; நா நவில்          புலவர் வாயுளான் - நாவால் நல்லுரை பயிலும் புலவருடைய          வாயிலிருந்து வரும் செய்யுளிடத்தே யுள்ளான்; எ - று.  |