இவ்விடை பெருங் கடுங் கோவின் புலமையுள்ளத்தை இயக்கி இப்பாட்டு வெளி வருவதாயிற்று. இப்பாட்டு இடையிடையே சிதைந்துள்ளது.
| எஃகுளங் கழிய விருநில மருங்கின் அருங்கட னிறுத்த பெருஞ்செ யாளனை யாண்டுள னோவென வினவுதி யாயிற் | | .......................... | | வருபடை தாங்கிய கிளர்தா ரகலம் | 5 | அருங்கட னிறுமார் வயவ ரெறிய | | உடம்புந் தோன்றா வுயிர்கெட் டன்றே மலையுநர் மடங்கி மாறெதிர் கிழியத் | | .......................... | | அலகை போகிச் சிதைந்துவே றாகிய பலகை யல்லது களத்தொழி யாதே | 10 | சேண்விளங்கு நல்லிசை நிறீஇ | | நாநவில் புலவர் வாயு ளானே. |
திணை...பாலைபாடிய பெருங்கடுங்கோ பாடியது.
உரை: எஃகு உளம் கழிய - பகைவர் எறிந்த வேல் நெஞ்சிற் பாய்ந்துருவிச் செல்ல; இருநில மருங்கின் - பெரிய நிலத்தின்கண் இருந்து; அருங்கடன் இறுத்த பெருஞ் செயாளனை - ஆற்றுதற்கரிய கடமையினை ஆற்றிய மிக்க செய்கையையுடைய சான்றோனாகிய மறவனை; யாண்டுளன் என வினவுதி - எவ்விடத்துள்ளான் என வினவுகின்றாய்; ஆயின் - ஆராயுமிடத்து;...வருபடை தாங்கிய கிளர்தார் அகலம் - தன்னைக் குறித்துவரும் மாற்றார் படையை எதிரேற்றற்குக் கிளர்ந்தெழும் மாலையணிந்த மார்பை; அருங்கடன் இறுமார் வயவர் எறிய - தம்முடைய அரிய கடனையாற்றுதல் வேண்டிப் பகைவர் எறிதலால்; உடம்பும் தோன்றாஉயிர் கெட்டன்று - அம்பும் வேலும் மொய்த்து உடம்பும் கட்புலனாகாத உயிரும் கெட்டன; மலையுநர் மடங்கி மாறு எதிர் கழிய - பொருகின்ற பகைவர் பிறக்கிட்டு முரணவிந்து கெடுதலால்...அலகை போகிச் சிதைந்து வேறாகிய பலகையல்லது - காக்கும் அமைதி கெட்டுச் சிதைந்து துணி துணியாகிய கேடக மொழிய; களத்து ஒழியாது - போர்க்களத்தே கிடந்தொழியாமல்;சேண்விளங்கு நல்லிசை நிறீஇ - திசைமுற்றும் பரவி விளங்கும் நல்ல புகழை நிலைநாட்டி; நா நவில் புலவர் வாயுளான் - நாவால் நல்லுரை பயிலும் புலவருடைய வாயிலிருந்து வரும் செய்யுளிடத்தே யுள்ளான்; எ - று. |