|       | அதனால் இம்மனை மகளிர்         நம்பால் பூக்களை வாங்கமாட்டார் என்று          கருதிப்பிறர் மனைக்கண் செல்கின்றாள்; அளியள் என்று பூவிலைப்          பெண்டின் பொருட்டு இரங்குவாள்போல எடுத்துரைத்தாள். இது கேட்ட          நொச்சிநியமங்கிழார் வியப்பு மிகக்கொண்டு அவள் கூற்றுப் பொருளாக          இப்பாட்டைப் பாடியுள்ளார். |   | நிறப்படைக்             கொல்கா யானை மேலோன்             குறும்பர்க் கெறியு மேவற் றண்ணுமை             நாணுடை மாக்கட் கிரங்கு மாயின்             எம்மினும் பேரெழி லிழந்து வினையெனப் |  | 5 | பிறர்மனை             புகுவள் கொல்லோ |  |   | அளிய             டானே பூவிலைப் பெண்டே. |  
      திணை:         காஞ்சி; துறை: பூக்கோட்காஞ்சி. நொச்சிநியமங்கிழார்          பாடியது.
       உரை: நிறப்படைக்கு         ஒல்கா யானை மேலோன் - குத்துக்கோற்கு          அடங்காத யானைமேலிருப்போனாகிய வள்ளுவன்; குறும்பர்க்கு எறியும்          ஏவல் தண்ணுமை - அரண் புறத்தே நின்று பொரும் பகைவர் பொருட்டு          முழக்கும் பூக்கொள்ளுமாறு ஏவுதலையுடைய தண்ணுமையொலி; நாணுடை          மாக்கட்கு இரங்கும் - போர்ப்பறை கேட்ட துணையானே புறப்படாத          நாணமில்லாத வீரர்இதனைக்கேட்டு விரையச்சென்று போர்ப்பூவைப்          பெறுமாறு ஒலியாநிற்கும்; ஆயின் - ஆதலால்; எம் மினும் பேரெழில்          இழந்து - மனைமகளிராகிய எம்மினும் பெரிய தனது எழுச்சி குன்றி;          வினையென - போர் நிகழுங் காலமாதலின் தனித்துறையும் மனைமகளிர்          இனிப் பூக்கொள்ளாரென்று கருதி; பூவிலைப் பெண்டு - பூ விற்கும்          பெண்டு; பிறர் மனை புகுவள் - பிற மகளிர் வாழும் மனைகட்குச்          செல்லுகின்றாள் போலும்; அளியள் - அளிக்கத்தக்காள்; எ - று.
               நிறப்படை - குத்துக்கோல். வலிமிக்க பட்டத்தியானை         யென்றற்கு          நிறப்படைக் கொல்கா யானை யென்றார். தன்பால் எழும் ஒலியால்          வேந்தனால் தரப்படும் காஞ்சிப்பூவைப் பெறுமாறு வீரரைப் பணித்தலைச்          செய்தலின், ஏவல் தண்ணுமை என்றார். போர்க்களத்தில், பகைவரை          மேற்சென்றெறியுமாறு ஏவுவது ஏவல் வியன்பணை (பதிற். 39)          எனப்படும். நாணுடைமாக்கள்: எதிர்மறைக் குறிப்பு மொழி. தனிமைத்          துயருழந்து எழிலிழக்கும் எம்மினும், எம்போற்பலருடைய தொடர்பிழந்து          பூ வாணிகம் குன்றவரும் இன்னாமையும் கொண்டு பெருந்துன்பமுழத்தலின்          பேரெழிலிழந்துஎன்றும். எனவே அவள் இரங்கத்தகும் நிலையினளென்பது          தோன்ற, அளியள் என்றும் கூறினாள். தண்ணுமை இரங்கும்; ஆயின்          பூவிலைப் பெண்டு இழந்து, வினையெனப் பிறர்மனை புகுவாள்; அளியள்         என வினைமுடிவு செய்க.
               விளக்கம்:         பூக்கோட் காஞ்சியாவது காரெதிரிய கடற்றானை,          போரெதிரிய பூக்கொண்டன்று (பு. வெ. மா. 4:10) என வரும். நுதலிற்         பாய்ந்து  |