| | இருங்கட லுடுத்தவிவ் வையகத் தருந்திறற் பொன்படு மால்வரைக் கிழவ வென்வேல் உடலுந ருட்குந் தானைக் | 20 | கெடலருங் குரைய நாடுகிழ வோயே. |
திணை - பாடாண்டிணை; துறை - பரிசிற்றுறை. பாரிமகளிரை இருங்கோவே ளுழைக்கொண்டு சென்ற கபிலர் பாடியது.
உரை: இவர் யார்என்குவையாயின் - இவர்யாரென்று வினவுவாயாயின்; இவர் - இவர்தாம்; ஊருடன் இரவலர்க்கு அருளி - ஊரெல்லாவற்றையும்இரப்போர்க்கு வழங்கி; தேருடன் முல்லைக்கீத்த - தேரை ஏறுதற்கேற்பச் சமைத்த அணியோடும் புரவியோடும்கூட முல்லைக்கு வழங்கிய; செல்லா நல்லிசை - தொலையாத நல்ல புகழையும்; படுமணி யானை - ஒலிக்கும் மணியையுடைய யானையையுமுடைய; பறம்பின் கோமான் நெடுமாப் பாரிமகளிர் - பறம்பிற்குத் தலவனாகிய மிக்க பெரிய பாரியுடைய மகளிர்; யான் தந்தை தோழன் - யான் இவர் தந்தையின் தோழனாதலான்; இவர் என் மகளிர் - இவர் என்னுடைய மகளிர்; அந்தணன்புலவன்கொண்டுவந்தனன் - அந்தணனாகியபுலவன் யான்கொண்டுவந்தேன்; நீயே - நீதான்;வடபால்முனிவன் தடவினுள் தோன்றி - வடபக்கத்து முனிவனுடைய ஓமகுண்டத்தின்கண் தோன்றி; செம்பு புனைந்தியற்றிய சேண் நெடும் புரிசை - செம்பால் புனைந்து செய்தாலொத்த சேய்மையையுடைத்தாகிய நெடிய மதிலையுடைய; துவரை ஆண்டு - துவராபதி யென்னும் படை வீட்டையாண்டு; உவரா ஈகை - வெறுப்பில்லாத கொடையினையுடையராய்; நாற்பத்தொன்பது வழிமுறை வந்த - நாற்பத்தொன்பது தலைமுறை தொன்றுபட்டு வந்த; வேளிருள் வேள் - வேளிருள்வைத்து வேளாயுள்ளாய்; விறற்போர் அண்ணல் - வென்றிப் போரையுடைய தலைவ; தாரணி யானைச் சேடு இருங்கோவே - தாரணிந்த யானையினையுடைய பெரிய இருங்கோவே; ஆண்கடன் உடைமையின் பாண்கடன் ஆற்றிய - ஆண்டன்மையைக் கடப்பாடாக வுடைமையால் பாணர்க்குச் செய்யக்கடவ முறைமையை யுதவிய; ஒலியல் கண்ணிப் புலிகடி மாஅல் - தழைத்த கண்ணியையுடைய புலிகடிமாலே; யான் தர இவரைக் கொண்மதி - யான் நினைக்குத்தர இவரைக் கொள்வாயாக, வான் கவித்து - வானாற் கவிக்கப்பட்டு; இருங்கடல் உடுத்த இவ்வையகத்து - பெருங்கடல் சூழ்தரப்பட்ட இவ் வுலகத்தின் கண்; அருந்திறல் பொன்படு மால் வரைக் கிழவ - அணுகுதற்கரிய வலியையுடைய பொன்னுண்டாகும் பெரிய மலைக்குத் தலைவ; வென்வேல் உடலுநர் உட்கும் தானை - வெற்றிவேலையுடைத்தாகிய பகைவரஞ்சும்படையையுடைய;கெடலரும்நாடுகிழவோய் - கேடில்லாத நாட்டுக்குரியவனே; என்றவாறு.
உவரா வீகை வேளிர் எனக் கூட்டுக. வடபால்முனிவன் தடவினுள் தோன்றி என்பதற்குக் கதையுரைப்பிற் பெருகும். அது கேட்டுணர்க. புலிடிமால் என்பது இவனுக்கொரு பெயர். வேளே, அண்ணல், |
|
|
|