பக்கம் எண் :

320

     

நிலையாமையாகிய அறத்தை வற்புறுத்தினான் என்றும் கோடற்கு இடமுண்டு.
இவர் பாடிய இப் பாட்டொன்று தவிர வேறே பாட்டுக்கள் தொகை நூல்களிற்
காணப்படவில்லை.

 பெரிதாராச் சிறுசினத்தர்
சிலசொல்லாற் பலகேள்வியர்
நுண்ணுணர்வினாற் பெருங்கொடையர்
கலுழ்நனையாற் றண்டேறலர்
 5.கனி குய்யாற் கொழுந்துவையர்
 தாழுவந்து தழுஉ மொழியர்
பயனுறுப்பப் பலர்க்காற்றி
ஏமமாக விந்நில மாண்டோர்
சிலரே பெரும கேளினி நாளும்
 10.பலரே தெய்யவஃ தறியா தோரே
 அன்னோர் செல்வமு மன்னிநில்லா
தின்னு மற்றதன் பண்பே யதனால்
நிச்சமு மொழுக்க முட்டிலை பரிசில்
நச்சுவர நிரப்ப லோம்புமதி யச்சுவரப்
 15.பாறிறை கொண்ட பயந்தலை மாறுதகக்
 கள்ளி போகிய களரி மருங்கின்
வெள்ளி னிறுத்த பின்றைக் கள்ளொடு
புல்லகத் திட்ட சில்லவிழ் வல்சி
புலைய னேவப் புனமே லமர்ந்துண
 20. டழல்வாய்ப் புக்க பின்னும்
 பலர்வாய் திராஅர் பகுத்துண்டோரே.

     திணையும் துறையுமவை. தந்துமாறனைச் சங்கவருண ரென்னும்
நாகரையர் பாடியது.


     உரை: பெரிதாராச் சிறு சினத்தர் - மிகைபட வுண்ணாத சிறிதே
சினமுடையவரும்; சில சொல்லால் பல கேள்வியர் - சிலவாகிய சொற்களைச்
சொல்லுதலோடு   பல   பொருள்களைச்   சான்றோர்    சொல்லக்
கேட்டலையுடையவரும்;    நுண்ணுணர்வினால்    பெருங்கொடைர் -
நுண்ணுணர்வோடு பெருங்கொடை வழங்குபவரும்; கலுழ் நினைால் தண்
தேறலர் - கலங்கிய கள்ளோடு தண்ணிய கட்டெளிவை யளிப்பவரும்; கனி
குய்யால் பொழுந்துவையர் - கனிந்த தாளிதத்தோடு  கூடிய  கொழுவிய
துவையலைப் பிறர்க்களிப்பவரும்; தாழுவந்து தமூஉமொழியர் - எல்லோர்க்கும்
பணிவை விரும்பி அவரை வணங்கிய   சொல்லால்   தழுவிப்   பேசும்
இன்சொல்லையுடையவருமாய்; பலர்க்குப் பயனுறுப்ப ஆற்றி - பலர்க்கும்
பயனுண்டாகத்தக்க செயல்களைச் செய்து; இந் நிலம் ஏமமாக