| காரெதி ருருமி னுரறிக் கல்லென ஆருயிர்க் கலமரு மாராக் கூற்றம் நின்வர வஞ்சலன் மாதோ நன்பல கேள்வி முற்றிய வேள்வி யந்தணர்க் |
5. | கருங்கல நீரொடு சிதறிப் பெருந்தகைத் |
| தாயி னன்று பலர்க்கீத்துத் தெருணடை மாகளி றொடுதன் உருணடைப் பஃறே ரொன்னார்க் கொன்றதன் |
10. | தாள்சேருநர்க் கினிதீத்தும் |
| புரிமாலையர் பாடினிக்குப் பொலந்தாமரைப் பூம்பாணரொடு கலந்தளைஇய நீளிருக்கையாற் பொறையொடு மலிந்த கற்பின் மானோக்கின் |
15. | வில்லெ விலங்கிய புருவத்து வல்லென |
| நல்கி னாவஞ்சு முள்ளெயிற்று மகளிர் அல்கு றாங்கா வசைஇ மெல்லென கலங்கலந் தேறல் பொலங்கலத் தேந்தி அமிழ்தென மடுப்ப மாந்தி யிகழ்விலன் |
20. | நில்லா வுலகத்து நிலையா மைநீ |
| சொல்ல வேண்டா தோன்றன் முந்தறிந்த முழுதுணர் கேள்விய னாகலின்........ ..................விரகி னானே. |