பக்கம் எண் :

395

     
 அலங்குளை யணியிவுளி
 5.நலங்கிள்ளி நசைப்பொருநரேம்
 பிறர்ப்பாடிப் பெறல் வேண்டேம்
அவற்பாடுது மவன்றாள் வாழியவென
நெய்குய்ய வூனவின்ற
பலசோற்றா னின்சுவைய
 10.நல்குவனின் பசித்துன்பற
 என்பநின் பொருநர் பெரும வதற்கொண்டு
முன்னாள் விட்ட மூதறி சிறாஅரும்
யானும், ஏழ்மணியங் கேழணி யுத்திக்
கட்கேள்விக் கவை நாவின்
 15.நிறனுற்ற வராஅப் போலும்
 வறனொரீஇ வழங்குவாய்ப்ப
விடுமதி யத்தை கடுமான் றோன்றல்
நினதே, முந்நீ ருடுத்த விவ் வியனுல கறிய
எனதே, கிடைக்கா ழன்ன தெண்கண் மாக்கிணை
 20.கண்ணகத் தியாத்த நுண்ணரிச் சிறுகோல்
 எறிதொறு நுடங்கி யாங்குநின் பகைஞர்
கேட்டொறு நடுங்க வேத்துவென்
வென்ற தேர்பிறர் வேத்தவை யானே.

     திணை: அது. துறை: கடைநிலை. சோழன் நலங்கிள்ளியைக்
கோவூர்கிழார் பாடியது.


     உரை: கடற்படை அடல் கொண்டி - கடலிற் படை கொண்டு சென்று
பகைவரை யடுதலாற் கெள்ளலாகும் பெரும் பொருள்; மண்டுற்ற மற
நோன்றாள் - நெருங்கிப் பெருகிய மறம் பொருந்திய வலிய தாளையுடைய;
தண் சோழநாட்டுப் பொருநன் - தண்ணிய சோழரது நாட்டில் வாழும்
பொருநன்; அலங்குஉளை அணி இவுளி நலங்கிள்ளி - (யாங்கள்) அசைகின்ற
தலையாட்டமணிந்த குதிரைகளையுடைய நலங்கிள்ளியது; நசைப் பொருநரேம்
- விருப்பத்துக்குரிய பொருநராவோம். பிறர்ப் பாடிப் பெறல் வேண்டேம் -
பிற வேந்தரைப் பாடி அவர் ஒன்று தரப்பெறுவதை விரும்ப மாட்டேம்;
அவன் தாள்வாழிய என - அவ னது முயற்சியால் நடைபெறும் அரசியல்
வாழ்வதாக என்று; அவற்பாடுதும் - அவனையே பாடுவோம்; நெய் குய்ய
ஊன் நவின்ற பல சோற்றான் -நெய்யால் தாளிதம் செய்யப்பட்ட வூன் கலந்த
பலவகையான சோற்றுடனே; இன் சுவைய - இனிய சுவையுடைய பிற
பொருள்களையும்; நின்