| ஒண்பொறிச் சேவ லெடுப்பவேற் றெழுந்து தண்பனி யுறைக்கும் புலரா ஞாங்கர் நுண்கோற் சிறுகிணை சிலம்ப வொற்றி நெடுங்கடை நின்று பகடுபல வாழ்த்தித் |
5. | தன்புக ழேத்தினெ னாக வென்வலத் |
| திடுக்க ணிரியல் போல வூன்புலந் தருங்கடி வியனகர்க் குறுகல் வேண்டிக் கூம்புவிடு மென்பிணி யவிழ்த்த வாம்பற் றேம்பா யுள்ள தங்கமழ் மடருணப் |
10. | பாம்புரி யன்ன வடிவின காம்பின் |
| கழைபடு சொலியி னிழையணி வாரா ஒண்பூங் கலிங்க முடீஇ நுண்பூண் வசிந்துவாங்கு நுசுப்பி னவ்வாங் குந்திக் கற்புடை மடந்தை தற்புறம் புல்ல |
15. | மெல்லணைக் கிடந்தோன்................... |
| வெறபெயர்ந்த...................நோக்கி................. ...................யதற்கொண் டழித்துப் பிறந்தனெ னாகி யவ்வழிப் பிறர், பாடுபுகழ் பாடிப் படர்பறி யேனே |
20. | குறுமுலைக் கலமரும் பாலார் வெண்மறி |
| நரைமுக வூகமொ டுகளும் வரையமல்... ...................குன்றுபல கெழீஇய கான்கெழு நாடன் கடுந்தே ரவியனென ஒருவனை யுடையேன் மன்னே |
25. | அறானெவன் பரிகோ வெள்ளியது நிலையே. |