பக்கம் எண் :

425

     

நெடிய காட்டிடத்து மலரும் பூக்களின் மணம் கமழும் விழாவாற் பொலியும்
அகன்ற மன்றத்தையொத்த; முற்றத்து - நெடுமனை முற்றத்தின்கண்; ஆர்வலர்
குறுகினல்லது   காவலர்   கனவிலும்  குறுகாக்   கடியுடை   வியனகர் -
அன்பராயினார்க்கன்றி மாறுகொண்ட வேந்தராயினார்க்குக் கனவின்கண்ணும்
சென்று  சேர்தற்கியலாத  காவலையுடைய  அகன்ற  நகரின்கண்  புகுந்து;
மலைக்கணத் தன்ன மாடம் சிலம்ப-மலைகளின் கூட்டத்தையொத்த மாடங்கள்
எதிரொலிக்க; என் அரிக்குரல் தடாரி இரிய ஒற்றி - எனது அரித்த ஓசையைச்
செய்யும் தடாரிப்றை கிழியும்படி யறைந்து; பன்னாள் பாடி நின்ற(து) அன்றியும் -
பன்னாள்  பாடி  நின்றதில்லையாகவும்;  சென்று ஞான்றைச் சென்று படர்
இரவில்  வந்ததற்கொண்டு - சென்ற  நாளில்  அன்றைய இரவுப் போதிலே
வந்ததுகொண்டு; நெடுங்கடை நின்ற புன்றலைப் பொருநன் அளியன் என -
நமது நெடுமனை முன்றிலில் நின்று பாடும் புல்லிய தலையையுடைய பொருநன்
அளிக்கத்தக்கவன்  என்று;  தன்னுழைக் குறுகல் வேண்டி - யான் தன்பால்
அணுகுவது குறி்த்து;என் அரை முதுநீர்ப் பாசி அன்ன உடை களைந்து -என்
இடையிலிருந்த பழைமையான நீர்ப்பாசிபோல் சிதர்ந்திருந்த ஆடையை நீ்க்கி;
திருமலர் அன்ன புதுமடி கொளீஇ -அழகிய பகன்றை மலர் போன்ற புத்தாடை
கொடுத்துடுப்பித்து; மகிழ்தரல் மரபின் மட்டேயன்றியும் - களிப்பினைத் தரும்
முறைமையினையுடைய கள்ளோடும்; அமிழ்தன மரபின் ஊன்துவையடி சில் -
அமிழ்து போற் சுவையுடைய ஊன்துவையலோடு கூடிய சோற்றை; வெள்ளி
வெண்கலத்து ஊட்டலன்றியும் - வெள்ளியாலாகிய வெள்ளிய கலத்தே பெய்து
உண்பித்ததோடு;  முன்னூர்ப்  பொதியில் சேர்ந்த - ஊர்க்கு முன்னிடமான
மன்றத்தில் தங்கியிருந்த; மென்டை இரும்பேரொக்கல் பெரும்புலம்பு அகற்ற -
தளர்ந்த  நடையினையுடைய  பெரிய  சுற்றத்தார்  என் பிரிவால் உண்டாகிய
தனிமைப்  பெரும்துயரைப்  போக்க;  அகடுநனை வேங்கை வீ கண்டன்ன -
தேனால் உள்ளிடம் நனைந்த வேங்கபை் பூவைக் கண்டாற்போன்ற; பகடுதரு
செந்நெல் போரொடு நல்கி - உழவெருதுகளைக் கொண்டு உழுது வினளவித்த
செந்நெல்லை இப்பொருளைப் பெற்றுக்கொள்க என்று சொல்லிக் கொடுத்தான்;
உண்டுறை மலை யலர் அணியும் தலைநீர் நாடன் - நீர்கொள்ளும் துறைக்கண்
மலையிடத்துப்  பூத்த  பூக்களைக் கொணர்ந் தொதுக்கும் தலை நீரால் வளம்
பொருந்திய நாட்டையுடையவன்; கண்டால் மனைகொண்டு திருந்தடி வாழ்த்தி
- அவனைக் கண்டால் மனையிடத்தே அழைத்துச் சென்று அவனுடைய