பக்கம் எண் :

436

     
 கேடின்றுநல்குமதி பெரும மாசில்
20மதிபுரை மாக்கிணை தெளிர்ப்ப வொற்றி
 ஆடுமக ளொல்க லொப்ப வாடிக்
கோடை யாயினுங் கோடே வொழுக்கத்துக்
காவிரி புரக்கு நல்நாட்டுப் பொருந
வாய்வாள் வளவன் வாழ்கெனப்
25பீடுகெழு நோன்றாள் பாடுகம் பலவே.

   திணையுந் துறையு மவை. சோழன் னுளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளி
வளவனை நல்லிறையனார் பாடியது.


     உரை: பதி  முதற்  பழகாப்  பழங்கண் வாழ்க்கை - தொடக்க முதலே
பழகி யறியாத துன்ப வாழ்க்கையில்;குறு நெடுந் துணையொடு கூர்மை வீதலின்
- இளைய  நெடிய  துணையாகிய  மனைவியுடனே மதிநுட்பமும் கெடுதலால்;
குடிமுறை  பாடி - குடிதோறும் முறையே சென்று பாடி;ஒய்யென வருந்தி -
ஈவோரின்மையின்  மிகவும்  நைந்து வருந்தி; அடல் நசை மறந்த எம் குழிசி
மலர்க்கும் - சோறு  சமைத்தற்கண்  உள்ள விருப்பத்தை மறந்த எம்முடைய
மட்பானையை   நிமிர்த்துச்   கமைக்கச்   செய்யும்;  கடன்   அறியாளர்
பரவுக்கடனையறிந்தாளும் செல்வர்; பிற நாட்டின்மையின் - பிற எந்நாட்டினும்
இலராதலால்;  வள்ளன்மையின்  எம்  வரைவோர்  யார் என - இரப்பார்க்கு
இல்லென்னாது  கொடுக்குந்  தன்மையுடைமையால் எம்மை எற்று உதவுவோர்
யாருளர் என்று; உள்ளிய உள்ளமொடு - நினைந்த நெஞ்சத்துடனே; உலைநசை
துணையா - வருந்துதற்  கேதுவான  விருப்பம் துணையாக; உலக மெல்லாம்
ஒருபாற்  பட்டென - உலக   வாழ்விற்குரிய   வளங்களெல்லாம்  ஒரிடத்தே
யுண்டானாற்போல; மலர்தார் அண்ணல் நின் நல்லிசை உள்ளி - மலர்களால்
தொடுக்கப்பட்ட  மாலை  யணிந்த  தலைவனாகிய  நீ உள்ளாயென அறிந்து
நின்னுடைய நல்ல புகழை நினைத்து; ஈர்ங்கை மறந்த என் இரும்பேரொக்கல்
- உண்டு கையீரமாதலைத் துறந்து வருந்தும் கெடுமாறு; கொழுநிணம் கிழிப்ப
- கொழுவிய வூனைத் துண்டாக்கி; கோடைப் பருத்தி வீடு நிறை பெய்த -
கோடையிற் கொண்ட பருத்தியினின்று நீக்கிச் சுகிர்ந்த பஞ்சியானது நிறையத்
திணித்த;  மூடைப்  பண்டம்  மிடை  நிறைந்தன்ன - பொதியாகிய பண்டம்
மிடைந்து  நிறைந்திரந்தாற்போல;  வெண்ணிணமூரி   அருளி - வெள்ளிய
வூன்துண்டங்களைக் கொடுத்து உண்பித்து, நாளுற ஈன்ற அரவின் நாவுருக்
கடுக்கும் - ஈனுதற்குரிய  பொழுது எய்த முட்டையீன்ற பாம்பினது நாவின்
வடிவைப்போல; என் தொன்றுபடு சிதாஅர் துவர நீக்கி - பழமை யுற்றுக்
கிழிந்து பிளவு பட்ட என் பீறிய உடையைமுற்றவும்நீக்கி;