| | டிரும்பே ரொக்கல் பெரும்புலம் புறினும் துன்னரும் பரிசி றருமென என்றுஞ் செல்லேனவன் குன்றுகெழு நாட்டே. |
திணையுந் துறையு மவை. கடைநிலையாயின வெல்லாம் பாடாண்டிணை. சோழிய ஏனாதி திருக்குட்டுவனைக் கோனாட்டு எறிச்சி லூர் மாடலன் மதுரைக் குமரனார் பாடியது.
உரை: சிலையுலாய் நிமிர்ந்த சாந்துபடு மார்பின் - விறபயிற்சி யால் உயர்ந்தகன்ற சந்தனம் பூசப்ட்ட மார்பினையுடைய; ஒலிகதிர்க் கழனி வெண்குடை கிழவோர் - தழைத்த கதிர்கள் பொருந்திய கழனிகள் சூழ்ந்த வெண்குடையென்னும் ஊர்க்குரியவனான; வலிதுஞ்ச தடக்கை வாய்வாள் குட்டுவன்- வலி பொருந்திய பெரிய கையையுடைய தப்பாத வானள யேந்தும் திருக்குட்டுவன்; வள்ளியனாதல் வையகம் புகழினும் - வள்ளன்மையுடைய னென்பதை உலகத்து நன்மக்கள் புகழ்ந்தோதினாலும்; உயர்மொழிப் புலவீர் - உயர்ந்த கருத்தமைந்த சொற்களை வழங்கும் புலவர்களே; உள்ளல் ஓம்புமின் - நினைத்தலைக் கைவிடுவீராக; யானும்-; இருள்நிலாக் கழிந்த பகல் செய் வைகறை-இருட்போதும் நிலவுப்போதும் கிாந்த பகற்போதினைச் செய்தற்குத் தோன்றிய விடியற்காலத்தே; ஒரு கண் மாக்கினண தெளிர்ப் ஒற்றி - ஒரு கண்ணையுடைய பெரிய தடாரிப்பறை மெல்ல ஒலிக்கு மாற இசைத்து; பாட இமிழ் முரசின் இயல்தேர்த் தந்தை - ஒலி முழங்குகின்ற முரசினையும் செய்யப்பட்ட தேரினையுமுடைய அவன் தந்தையது; வாடா வஞ்சி பாடினெனாக - வஞ்சித்துறைப் பாட்டொன்றைப் பாடினேனாக; அகமலி யுவகையொடு - மனம் நிறைந்த உகையினால்; அணுகல் வேண்டி - பிரிவின்றித் தன்பால் அன்பால் நெருங்கியுறைய வேண்டுமென விரும்பி; கொன்று சினந் தணியாப் புலவு நாறு மருப்பின் - பகைவரைக் கொன்ற பின்பும் முன்புகொண்ட சீற்றம் குன்றாத புலான் மணங்கமழும் கோட்டினையுடைய; வெஞ்சின் வேழம் நல்கினன் - வெவ்விய சினத்தையுடைய யானையொன்றைத் தந்தான்; அஞ்சி - அது கண்டு அச்சமுற்று; யான் அது பெயர்த்தனெனாக - யான் அவ் வேழத்தை அவன் யால் திருப்பி விட்டேனாக; தான் அது சிறிதென வுணர்ந்தமை நாணி-அவன் தான் அது என்வரிசைக்குச் சிறிதென உணர்ந்தமை யெண்ணி நாணமுற்று, பிறிதும் ஒருபெருங்களிறு நல்கியோன் - மேலும் வேறே ஒரு பெரிய களிற்றை நல்கினான்; அதற்கொண்டு - அதனால்; இரும்பேரொக்கல் பெரும்புலம் புறினும் - மிக்க பெரிய என சுற்றத்தார் வறுமையால் பெருந்துன்பம் எய்தினாராயினும்; அவன் குன்றுகெழுநாட்டு - குன்றுகள் பொருந்திய அவனுடைய நாட்டுக்கு; |