| மதிநிலாக் கரப்ப வெள்ளி யேர்தர வகைமா ணல்லில்..... பொறிமயிர் வாரணர் பொழுதறிந் தியம்பப் பொய்கைப் பூமுகை மலரப் பாணர் |
5. | கைவல் சீறியாழ் கடனறிந் தியக்க |
| இரவுப்புறம் பெற்ற வேம வைகறைப் பரிசிலர் வரையா விரைசெய் பந்தர் வரிசையி னிறுத்த வாய்மொழி வஞ்சன் நகைவர் குறுகி னல்லது பகைவர்க்குப் |
10. | புவியின் மடிந்த கல்லளை போலத் |
| துன்னல் போகிய பெரும்பெயர் மூதூர் மதியத் தன்னவென் னரிக்குரற் றடாரி இரவுரை நெடுவா ரரிப்ப வட்டித் துள்ளி வருநர் கொள்கல நிறைப்போய் |
15. | தள்ளா நிலையை யாகிய ரெமக்கென |
| என்வர வறீஇச் சிறிதிற்குப் பெரிதுவந்து விரும்பிய முகத்த னாகி என்னரைத் துரும்புபடு சிதாஅர் நீக்கித் தன்னரைப் |
20. | புகைவிரிந் தன்ன பொங்குதுகி லுடீஇ |
| அழல்கான் றன்ன வரும்பெறன் மண்டை நிழல்காண் டேற னிறைய வாக்கி யானுண வருள லன்றியுந் தானுண் மண்டைய கண்ட மான்வறைக் கருணை |
25. | கொக்குகிர் நிமிர லொக்க லார |
| வரையுறழ் மார்பின் வையகம் விளக்கும் விரவுமணி யொளிர்வரு மரவுற ழாரமொடு புரையோன் மேனிப் பூத்துகிற் கலிங்கம் உரைசெல வருளியோனே |
30. | பறையிசை யருவிப் பாயற் கோவே. |