பக்கம் எண் :

464

     
 ஓங்குசினை மாவின் றீங்கனி நறும்புளி
 5.மோட்டிரு வராஅற் கோட்டுமீன் கொழுங்குறை
 செறுவின் வள்ளை சிறுகொடிப் பாகற்
பாதிரி யூழ்முகை யவிழ்விடுத் தன்ன
மெய்களைந் தினனொடு விரைஇ...
மூழ்ப்பப் பெய்த முழுவவிழ்ப் புழுக்கல்
 10.அழிகளிற் படுநற் களியட வைகிற்
 பழஞ்சோ றயிலு முழங்குநீர்ப் படப்பைக்
காவிரிக் கிழவன் மாயா நல்லிசைக்
கிள்ளி வளவ னுள்ளி யவற்படர்தும்
செல்லேன் செல்லேன பிறர்முக நோக்கேன்
 15.நெடுங்கழைத் தூண்டில் விடுமீ னொடுத்துக்
 கிணைமக ளட்ட பாவற் புளிங்கூழ்
பொழுதுமறுத் துண்ணு முண்டியே னழிவுகொண்
டொருசிறை யிருந்தே னென்னே யினியே
அறவ ரறவன் மறவர் மறவன்
 20.மள்ளர் மள்ளன் றொல்லோர் மருகன்
 இசையிற் பொண்டா னசையமு துண்கென
மீப்படர்ந் திறந்து வன்கோன் மண்ணி
வள்பரிந்து கிடந்த வென் றெண்கண் மாக்கிணை
விசிப்புறுத் தமைந்த புதுக்காழ்ப் போர்வை
 25.உலகின் மாலை யார்ப்ப வட்டித்துக்
 கடியு முணவென்னக் கடவுட்குந் தொடேன்
கடுந்தே ரள்ளற் கசாவா நோன்சுவற்
பகடே யத்தையான் வேண்டிவந் ததுவென
ஒன்றியான் பெட்டா வளவை யன்றே
 30.ஆன்று விட்டன னத்தை விசும்பின்
 மீன்பூத் தன்ன வுருவப் பன்னிரை
ஊர்தியொடு நல்கி யோனே சீர்கொள
இழுமென விழிதரு மருவி
வான்றோ யுயர்சிமைத் தோன்றிக் கோவை.

     திணை: அது. துறை: பசில்விடை. தாமான் தோன்றிக்கோனை ஐயூர்
முடவனார் பாடியது.


     உரை: அடுமகள் முகந்த அளவா வெண்ணெல் - சோறாக்கும் பெண்.
முகந்து கொணர்ந்த அளக்கப்படாத வெண்ணெல்லினுடைய;