பக்கம் எண் :

67

     

துணிந்து உலறவும்; காலியல் கலிமா கதியின்றி வைகவும் - காற்றுப்போலும்
இயலையுடைய  மனஞ்செருக்கிய   குதிரைகள்  கதியின்றிக்கிடக்கவும்;
மேலோருலகம் எய்தினன் - இப்படிக்கிடக்கத்  தேவருலகத்தை
யடைந்தான்; ஆகலின்-ஆகையாலே; ஒண்டொடி மகளிர்க்கு
உறுதுணையாகி - ஒன்றிய வளையையுடைய  மகளிர்க்குமேவப்பட்ட
துணையாகி; தன் துணை ஆயம் மறந்தனன் கொல்லோ -தனக்குத்
துணையாகிய மகளிரையும் மறந்தான் கொல்லோ; பகைவர்ப் பிணிக்கும்
ஆற்றல் - பகைவரைப்பிணித்துக் கொல்லும் வலியையும்;   நசைவர்க்கு
அளந்து கொடை அறியா ஈகை - நச்சியோர்க்கு அளந்து கொடுத்தலறியாத
வண்மையையுமுடைய;  மணிவரை  யன்ன மா அ யோன்  -நீல
மலைபோலும்  மாயோன்; எ - று.


    மன்னும் தில்லும் அசை. கயத்துக்  குளக்கடை  யென்க. நற்றிசை
யாகிய கிழக்கும் வடக்கும் செல்லாது தீத்திசையாகிய தெற்கும் மேற்குமாகிய
இரண்டனுள் ஒருதிசைக்கண்  வீழ்ந்ததென்று ஆம்;அன்றி,  வடக்கும்
கிழக்கும் செல்லாதெனவே, வடகிழக்கே வீழ்ந்த தென்றுமாம். படவென்றல்,
இன்னாமையிற்கைவைத்துறங்கவும், கண் கிழிந்துருளவும்,கால்
பரிந்துலறவும், கதியின்றி வைகவும் எனக் தகுதி பற்றிக் கூறப்பட்டன.


    மாயோன், மகளிர்க்குத் துணையாகி, தன்றுணையாயம் மறந்தனனோ,
இல்லையோ; யாம் மறவா நிலைமையமாயினம் என இரங்கிக் கூறியவாறு.

    “அஞ்சினம் எழுநாள் வந்தன்றின்றென” என்றும் பாடம்.

    விளக்கம்: அழல் சேர் குட்டம் என்பது கார்த்திகை நாள். “அக்
கினியை அதிதேவதையாக வுடைமையின், கார்த்திகைக்கு அழலென்பது
பெயராயிற்று” என்ப.ஆட்டினை,வடநூலார்மேடராசியென்பர். ஆடு
முதல் மீன் ஈறாகவுள்ள இராசி பன்னிரண்டுக்கும் அசுவனி முதல் இரேவதி
ஈறாகவுள்ள நாள் இருபத்தேழினையும் வகுத்தளிக்கின், முதல் இரண்டேகால்
நாள்ஆடாகியமேடத்துக்குரியவாதலின்,கார்திகையின்முதற்காலை
“ஆடியல் அழற் குட்டம்” என்றார்.அனுடமென்பதுஆறு மீன்களின்
தொகுதி; அது வளைந்த பனைமரம்போ லமைதலின், “முடப் பனையம்”
எனப்பட்டது.வேர்முதலா -அடியின்  வெள்ளி;  அஃதாவதுமுதல்
நாண்மீன்.உயரழுவம்  - முதற ் பதினைந்துநாள்.தலைநாண்மீன்
உத்தரநாள். நிலை நாண் மீன் - எட்டாம் மீன்; “உச்சி  மீனுக்குமுன்
எட்டாவது மீன் அத்தமித்தலும் பின் எட்டாவது மீன் உதித்தலும் இயல்பு;
“உச்சி மீனுக் கெட்டாம் மீன்  உதய மீன்”என்ப.தொன்னாண்மீன்-
எட்டாம் மீனாகிய மிருகசீரிடம். பாசி - கிழக்குத் திசை. ஊசி - வடக்குத்
திசை. பங்குனித் திங்களில் நட்சத்திரம் வீழின், இராச பீடையென்பர்;
“ஆடுகயல் தேள் தனுச்சிங்கத் தெழுமீன் விழுமேல் அரசழிவாம்” என்பர்.
கயமாகிய குளம் என்றது கயக்குளம் என்றார் அஃதாவது புனர்பூசம்; இது
குளம்போலும் வடிவுடையது. இதுபற்றியே, பிங்கலந்தையும், “அதிதி நாள்