பக்கம் எண் :

81

     
 முதுவா யொக்கற் பரிசில ரிரங்கக்
கள்ளி போகிய களரியம் பறந்தலை
வெள்வேல் விடலை சென்றுமாய்ந் தனனே
15 ஆங்கது நோயின் றாக வோங்குவரைப்
 புலிபார்த் தொற்றிய களிற்றிரை பிழைப்பின்
எலிபார்த் தொற்றா தாகு மலிதிரைக்
கடன்மண்டு புனலி னிழுமெனச் சென்று
நனியுடைப் பரிசிற் றருகம்
20எழுமதி நெஞ்சே துணிபுமுந் துறுத்தே.

   திணையும் துறையு மவை. வெளிமானுழைச் சென்றார்க்கு
அவன் துஞ்ச இளவெளிமான் சிறிது கொடுப்பக் கொள்ளாது
பெருஞ்சித்திரனார் பாடியது.

     உரை: நீடு வாழ்க என்று - நெடுங்காலம் வாழ்வாயாக என்று; யான்
நெடுங்கடை குறுகி - யான் நெடிய வாயிலை யணுகி; பாடிநின்ற பசி
நாட்கண் - பாடி நின்ற பசியையுடைய காலத்தின்கண்ணே; கோடைக்
காலத்துக் கொழு நிழலாகி- கோடையான் வெம்மையுற்ற பொழுதின்கண்
அடைந்தார்க்குக் கொழுவிய நிழலையொத்து; பொய்த்தல் அறியா உரவோன்
- யார் கண்ணும் பொய் கூறுதலறியாத அறிவையுடையோனது; செவிமுதல்
வித்திய பனுவல் - செவியிடத்து நல்லோர் விதைத்த கேள்வியாகிய பயிர்;
நன்று விளைந்தன்று என - நன்றாக விளைந்ததென நினைத்து; நச்சியிருந்த
நசை பழுதாக - பரிசிலை விரும்பியிருந்த அவ்விருப்பம் பயனில்லையாக;
அட்ட குழிசி அழல் பயந்தாங்கு -அடப்பட்ட பானையினின்றும் சோறின்றி
எரிபுறப்பட்டாற்போல; அளியர் - அளிக்கத்தக்கார்; ஆர்க என்னா
அறனில் கூற்றம் - உண்பாராகவென்று கருதாத அறமில்லாத கூற்றம்;
திறனின்று துணிய - கூறுபாடின்றாகி அவன் உயிரைக் கொள்ளத் துணிய;
ஊழின் உருப்ப எருக்கிய மகளிர் - முறையான் வெய்தாக மார்பின்கண்
அறைந்து கொண்ட மகளிர்; வளை முறி வாழைப் பூவின் சிதற; முதுவாய்
ஒக்கல் பரிசிலர் இரங்க - முதிய வாக்கினையுடைய சுற்றத்தோடு கூடிய
பரிசிலர் இரங்க; கள்ளி போகிய களரியம் பறந்தலை - கள்ளி யோங்கிய
களர் நிலமாகிய பாழ்பட்ட புறங்காட்டின்கண்; வெள்வேல் விடலை சென்று
மாய்ந் தனன் - வெளிய வேலையுடைய வீரன் போய் இறந்துபட்டான்;அது
நோய் இன்றாக - கூற்றம் நோயின்றியிருப்பதாக; ஓங்கு வரை - உயர்ந்த
மலையிடத்து; புலி பார்த்து ஒற்றிய - புலி பார்த்து
வீழ்த்த;