அஃதாவது, தலைமகன் தலைமகளின் காதற்குறிப்பை அவள் பார்வையினின்றும் செயல்களினின்றும் உய்த்துணர்தல். இயற்கைப் புணர்ச்சிக்குமுன் நிகழ்வதும் நிகழக்கூடியதும் இஃதொன்றேயாயினும், பொருளொப்புமை பற்றியும் சுருக்கம் பற்றியும், பாங்கியிற் கூடடத்திற்குமுன் தலைமகன் தோழிகுறிப்பினையறிதலும், அவள் தலைமக்களிருவர் குறிப்பினையுமறிதலும், இங்குச் சேர்த்துக் கூறப்பட்டுள என அறிக.
தகையணங்குற்ற தலைமகன் தலைமகளைக் கூடுதற்கு அவள் குறிப்பறிதல் இன்றியமையாததாதலின் , இது தகையணங்குறுத்தலின் பின்னும் இயற்கைப் புணர்ச்சிக்கு முன்னும் வைக்கப்பட்டது.