[உடன்போக்கில் தலைமகன் தன்னுள்ளே சொல்லியது. ] சேயிழை மாட்டுச் செறிதோறும் காமம் - இச்செம்மையான அணிகலன் களையுடயாளொடு கூடுந்தோறும் நான் பெறுங் காமவின்பம் ; அறிதோறு அறியாமை கண்ட அற்று - நூல்களாலும் நுண்மதியாலும் பொருள்களை அறியவறிய முன்னையறியாமை விளங்கித் தோன்றினாற்போலத் தோன்றுகின்றது. உடன்போக்காவது , தலைமகன் பெற்றோர் அவளைத்தர இசையாதபோது , தலைமகன் அவளைக் கூட்டிக் கொண்டு தன்னூர்க் கேனும் வேற்றூர்க்கேனுஞ் செல்லுதல், அறிவிற் கெல்லையின்மையின் மேன்மேலறிய வறிய முன்னை யறியாமை மிகுந்து தோன்றுவது போல , இன்பத்திற்கும் எல்லையின்மையின் தன் காதலியொடு மேன் மேற் கூடக்கூட முன்னையின்ப நூகர்ச்சிக்குறைவு விளங்கித்தோன்று கின்றதென்று , அவள் சிறப்புக் கூறியவாறு . களவொழுக்கத்திற் பல்வேறு தடைகளால் பன்னாள் தலைமகளைக் கூடப்பெறாது துன்புற்ற தலைமகன் , இன்று அத்தடைகள் முற்றும் நீங்கியமை தோன்றச் ' செறிதோறும் ' என்றான். ' சேயிழை ' அன்மொழித்தொகை . ' ஆல் அசைநிலை . இப்புணர்ச்சி மகிழ்தல் தலைமகட்குமுண்டேனும் , அது அவள் நாணம் பற்றிக் குறிப்பாக நிகழ்வதல்லது கூற்றாக நிகழா தென அறிக.
|