(காதலர் தெளிவித்த சொற்களையும் அவர் நற்றிறங்களையும் அறிதியாதலின் அவர் வரும்வரை ஆற்றியிரு என்ற தோழிக்குச் சொல்லியது.) . யான் மன் உள்ளுவன்- காதலர் சொற்களை யான் மிகுதியும் நினைப்பேன்; உரைப்பது அவர் திறம்-யாரிடத்திலும் சொல்லுவதும் அவர் நற்றிறங்களையே; பசப்புக் கள்ளம்-அங்ஙனமிருந்தும் எப்படியோ இப்பசலை கள்ளத்தனமாக வந்துள்ளது. முக்கரணங்களுள் மெய் ஏனையிரண்டின் வழிப்பட்டதாகலின், நினைவு சொல் வழியாக வராது நேரே மெய்வழியாக வந்தது மாயமாயுள்ளது என்பதாம்.'ஆல்,' 'பிற,' 'ஓ' அசைநிலைகள்.
|