பக்கம் எண் :

அறனறிந்து வெஃகா வறிவுடையார்ச் சேருந்
திறனறிந் தாங்கே திரு.

 

அறன் அறிந்து வெஃகா அறிவு உடையார் - இது அறமென்று தெளிந்து பிறர்பொருளை விரும்பாத அறிவுடையாரிடத்து; திரு திறன் அறிந்து ஆங்கே சேரும் - திருமகள் தான் அடைதற்கான திறங்களையறிந்து அவற்றின்படியே சென்றடைவாள்.

'திரு' ஆகுபெயர். திறங்கள் காலமும் இடமும் வினையும் பிறன் பொருளை விரும்பாமையாற் செல்வம் சுருங்காதிருப்பதோடு புதிதாகத் தோன்றவுஞ்செய்யும் என்பது இதனாற் கூறப்பட்டது.