பழிநாணுவார் -பழிக்கு அஞ்சுவார்; தினைத்துணை ஆம் குற்றம் வரினும் பனைத்துணையாக் கொள்வர் -தம்மிடம் தினையளவு சிறிதாகக் குற்றம் நேரினும் அதைப் பனையளவு பெரிதாகக் கருதுவர். தினை, பனை, என்பன அளவுப்பெயர்கள்; இங்குச் சிறுமை பெருமை பற்றியே வந்தன. உம்மை இழிவு சிறப்பு. 'குற்றம் வகுப் பொருமை. கொள்ளுதல் கொண்டு நீக்குதல்.
|