பக்கம் எண் :

வினைக்கண் வினையுடையான் கேண்மைவே றாக
நினைப்பானை நீங்குந் திரு.

 

வினைக்கண் வினை உடையான் கேண்மை - தன்னிடம் ஒப்படைக்கப்பட்ட வினையை முழுநேரமும் முழுமுயற்சியுடன் செய்து வருபவன் அவ்வுரிமை பற்றி அரசனொடு உறவுபோல் ஒழுகுவதை ; வேறாக நினைப்பானைத் திரு நீங்கும் - பொறாமைக்காரர் கோட்சொல்லைக்கேட்டு அரசன் வேறுபடக் கருதுவானாயின் , திருமகள் அவனைவிட்டு நீங்குவாள்.

உறவுபோல் ஒழுகுதலாவது அரசன் குடும்பவினைகளிற் கலந்து கொள்ளுதல் . அதை மதிப்புக் கேடாகக் கொண்டு அரசன் அவனைத் தண்டிக்கக் கருதுவானாயின் , அவன்போல் முழுப்பொறுப்பேற்று உண்மையாக வுழைப்பவர் வேறொருவரு மின்மையால், அரசன் செல்வங்கெடு மென்பதாம் . "திரு" ஆகுபெயர்.