பக்கம் எண் :

இடும்பைக் கிடும்பை படுப்ப ரிடும்பைக்
கிடும்பை படாஅ தவர்.

 

இடும்பைக்கு இடும்பை படாதவர்-துன்பம் வருங்கால் துன்பப் படாதவர்; இடும்பை படுப்பர் - அத்துன் பத்திற்கே துன்பஞ் செய்வர்.

துன்பத்தின் நோக்கமே வருத்துதலாதலின், அத்துன்பத்திற்கு வருந்தாதவர் அதன் நோக்கத்தைத் தோற்கடித்தலால் அத்துன்பத்தையே வருத்துவர் என்றார். இதனால் துன்பத்தால் தடையுறாது வினை இனிது முடியும் என்பதாம். இதில் வந்துள்ளது சொற்பொருட்பின்வரு நிலையணி. வருகின்ற இரு குறளிலும் துன்பம் துன்பப்படும் என்பதற்கு இவ்வாறே உரைக்க.