வினைத்திட்பம் வேண்டாரை-வினை செய்வதில் உறுதியை விரும்பாத அமைச்சரை; எனைத்திட்பம் எய்தியக் கண்ணும்-வேறு எத்தகைய உறுதி யுடையவரா யிருப்பினும்; உலகு வேண்டாது-உயர்ந்தோர் விரும்பார். மனத்திண்மை, மதித்திண்மை, அறிவுத்திண்மை, உடல்திண்மை, வினைத்திண்மை, என அகத்திண்மை பல வகைப்படும். கருவித்திண்மை, இடத்திண்மை, காலத்திண்மை, படைத்திண்மை முதலியன புறத்திண்மையாம். இவை யெல்லா மிருந்தும் மெய்ம் முயற்சியாகிய வினைத்திண்மை யில்லாவிடத்துப் பயன்படாமையின், ' வினைத்திட்பம் வேண்டாரை வேண்டாதுலகு' என்றார். 'உலகு' ஆகுபெயர்.
|