பக்கம் எண் :

அழிவந்த செய்யினு மன்பறா ரன்பின்
வழிவந்த கேண்மை யவர்.

 

அன்பின் வழிவந்த கேண்மையவர்-அன்போடு கூடிப் பழைமையாக வந்த நட்பையுடையார்; அழிவந்த செய்யினும் அன்பு அறார்-தம் நண்பர் தமக்கு அழிவு தருவனவற்றைச் செய்தாராயினும் அவர்பால் அன்பு நீங்கார்.

'அழி' முதனிலைத் தொழிற்பெயர். 'அழிவா' முதனிலை. உம்மை இழிவு சிறப்பு.

இன்னா செயினும் விடுதற் கரியாரைத்
துன்னார் துறத்தல் தவறுவதோ-துன்னருஞ்சீர்
விண்குத்து நீள்வரை வெற்ப களைபவோ
கண்குத்திற் றென்றுதங் கை."