சொல்வேறு வினைவேறு பட்டார் தொடர்பு-சொல்லொன்றுஞ் செயலொன்றுமா யிருப்பவரின் நட்பு-கனவினும் இன்னாது - நனவில் மட்டுமன்றிக் கனவில் நினைப்பினும் துன்பந்தருவதாம். சொல்வேறு வினைவேறு படுதலாவது சொல்லளவில் நண்பராகவும் செயலளவிற் பகைவராகவுமிருத்தல். மதியொடும் மனச் சான்றொடும் கூடாத தூக்கநிலையிலும் துன்பந்தருமென்று, அதன் கொடுமை கூறியவாறு. எச்சவும்மை தொக்கது. 'மன்' 'ஓ' அசை நிலைகள்.
|